twitter


கீ லாகர்ஸ் என்பவை நாம் தட்டும் விசைகளை ஒரு டெக்ஸ்ட்(.txt) பைலாக சேமித்து இணையத்தின் மூலமாக அதை நிறுவிய நபருக்கு அனுப்பவோ அல்லது அதை அவர் திறந்து பார்க்கும்வரை சேமித்து வைக்கவோ பயன்படுகிறது, ஹாக்கிங்கில் இவையே இரண்டாவது இடத்தில் உப்யோகிக்கபடுகிறது. இந்த கீ லாகரிலிருந்து நம் தகவல்களை பாதுகாத்துக் கொள்வொதற்கான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.
  1. உங்கள் firewall ஐ எனேபில் செய்திடுங்கள்:
    Firewall மூலம் கீ லாகர்ஸை தடுக்க முடியாது ஆனால் கீ லாகர்ஸ் உங்களுக்கு தெரியாமல் உங்கள் இணையத்தின் மூலம் தகவல்களை அனுப்புவதை தடுக்க முடியும்.

  2. நல்ல வைரஸ் எதிர்ப்பான்(ANTI VIRUS) மென்பொருளை பயன்படுத்துங்கள்:
    நல்ல வைரஸ் எதிர்ப்பானை மட்டுமே பயன்படுத்துங்கள், CRACK செய்யப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். முடிந்தவரை டோரண்டிலிருந்து மென்பொருள் தரவிறக்கி பயன்படுத்துவதை தவிர்க்கவும், ஏனென்றால் TORRENT தான் ஹாக்கர்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.
  3. முடிந்தால் ஒரு ANTI SPYWARE மென்பொருளையும் பயன்படுத்தலாம். இவை கீ லாகர்ஸ் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் இவை எச்சரிக்கை செய்யும்.

    உங்கள் கணினியில் KEYLOGGER நிறுவப்பட்டிருக்குமா என நீங்கள் சந்தேகித்தால் உங்கள் தகவலை பாதுகாக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

  4. வீட்டிலும் பொது இடங்களிலும் உங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை டைப் செய்ய உங்கள் கணினியின் கீ போர்டை பயன்படுத்தாமல் ஆன் ஸ்கிரீன் கீ போர்டை(on screen keyboard) பயன்படுத்தவும், விண்டோசில் அதனை ஒப்பன் செய்ய osr என run கம்மாண்டில் டைப் செய்யவும்.

  5. எல்லா கணினிகளிலும் உங்கள் கடவுச்சொல்லை டைப் செய்யுமுன் தேவையற்ற 2-4 எழுத்துக்களை டைப் செய்து பின்னர் அதனை மௌசால் செலக்ட் செய்து கொண்டு பின்னர் உங்கள் கடவுச்சொல்லை டைப் செய்யவும், இதனால் உங்கள் கீலாகரில் தவறான கடவுச்சொல்லே சேமிக்கப்படும்.

  6. கீ லாகர்ஸ் எப்போதும் பின்புலத்தில் உங்களுக்கு தெரியாமல் இயங்கிக்கொண்டிருக்கும், எனவே டாஸ்க் மேனஜரை(TASK MANAGER) செக் செய்து சந்தேகப்படும்படியான ப்ராசஸ்களை(process) எண்ட் செய்துவிடவும்.

    மேலே குறிப்பிட்ட அனைத்தும் உங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் உபயோகமான குறிப்புகளாக இருக்குமென நம்புகிறேன்.
Reade more >>
Friday, August 5, 2011 | 0 comments | Labels:
காங்கிரஸ், பா.ஜ., மற்றும் சமாஜ்வாடி வெளியிட்ட முதல் பட்டியலில், 18 வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள்; சிலர் தண்டனை பெற்றிருப்பவர்கள். கிரிமினல்களை அரசியலில் சேர்க்கக்கூடாது என்று என்னதான் முழங்கினாலும், பல கட்சிகளிலும் இவர்களின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. போதாக்குறைக்கு, பணபலமும், செல்வாக்கும் உள்ளதால் தேர்தலில் நிறுத்த வேண்டிய கட்டாயம் கட்சிகளுக்கு ஏற்படுகிறது.

"நேஷனல் எலக்ஷன் வாட்ச்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இது தொடர்பாக தகவல் களை திரட்டியுள்ளது. கடந்த தேர்தல்களிலும் இந்த அமைப்பு, அரசியலில் கிரிமினல்கள் ஆதிக் கம் பற்றி தகவல்களை ஆராய்ந்து சர்வே அறிக்கையை வெளியிட்டது.லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சிகள் வெளியிட்டதில், 18 பேர் கிரிமினல் நடவடிக்கைக்கு ஆட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில், காங்கிரசை சேர்ந்தவர்களில் நான்கு பேர், பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் எட்டு பேர், சமாஜ் வாடியில் ஆறு பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

முலாயம் சிங்கின் சமாஜ்வாடியில் இருந்த நடிகர் ராஜ் பப்பர், இப்போது காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். அதுபோல, பா.ஜ.,வின் ஆனந்த் குமார், ராம்காந்த் யாதவ் மற்றும் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. சித்து மீதான கொலை வழக்கில் அவருக்கு தண்டனை தரப்பட்டு, அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள லோக்சபாவை சேர்ந்த இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த 169 எம்.பி.,க்கள் வெளியிட்ட வாக்குமூலத்தில், தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். உ.பி.,யில் மெய்ன்பூரி தொகுதியில் போட்டியிட உள்ள சமாஜ் வாடி தலைவர் முலாயம் சிங் மீது அளவுக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு உட்பட சில வழக்குகள் விசாரணையில் உள்ளன.

மற்ற மாநிலங்களை விட, உ.பி.,யில் தான் அதிகமாக கிரிமினல் வேட்பாளர்கள் நிற்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

நாளேட்டுச்செய்தி (12-03-09)
Reade more >>
Thursday, March 12, 2009 | 3 comments | Labels:
- தமிழருவி மணியன்

'நா
டு விடுதலை பெற்றதும் காங் கிரஸ் இயக்கத்தின் பணி முடிந்து விட்டது. இனி காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதில் எனக்கு சம்மதம் இல்லை. இந்தியாவிலுள்ள ஏழு லட்சம் கிராமங்களின் நலனை நோக்கி நாம் நடக்க வேண்டும். காங்கிரஸைக் கலைத்துவிட்டு லோக்சேவக் சங்கம் அமைக்கவேண்டும்!'' என்று அறிவித்தார் அண்ணல் காந்தி. அதுதான் அவருடைய கடைசி விருப்பம். சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே காங்கிரஸ்காரர்கள் காந்தியை மறந்தனர். பதவிகளைப் பெறுவதில் அவர்கள் நடத்திய போட்டியும், ஆடம்பர மான வாழ்க்கை சுகங்களை அனுபவிப்பதில் அவர்கள் காட்டிய ஈடுபாடும் காந்தியின் இதயத்தை வருத்தியதால், அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய லூயி ஃபிஷரிடம், 'இந்தியா என்னோடு இல்லை என்பதை நானறிவேன்' (I Know India is not with me) என்றார்.

காந்தியை எதிரியாக பாவித்த கோட்சே, ஒரு நாள் மாலைப் பொழுதில் துப்பாக்கியால் நேருக்கு நேர் நின்று சுட்டுக்கொன்றான். அந்தப் படுகொலை ஒரு கணத்தில் நடந்து முடிந்தது. ஆனால், மகாத்மாவின் சீடர்களால் நேர்மை, எளிமை, தூய்மை, வாய்மை தன்னல மறுப்பு என்னும் காந்தியப் பொதுவாழ்க்கைப் பண்புகள் அனைத்தும் கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லறைக்குப் போய்விட்டன. கோட்சேவை விடவும் கொடியவர்கள், 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்று முழங்கும் புதிய காங்கிரஸ்காரர்கள்.

காந்தியின் தலைமை காங்கிரஸ§க்கு வாய்ப்பதற்கு முன்பே தமிழகத்தில் அந்த விடுதலை இயக்கத்தை வியர்வை சிந்த வளர்த்து, ஒரு ஜென்மத்தில் இரு ஜென்ம தண்டனையை பரிசாகப் பெற்று சிறையில் செக்கிழுத்த வ.உ.சி. ஒரு கட்டத்தில் மனம் நொந்து காங்கிரஸை விட்டு வெளியேறினார். தமிழகத்தில் அந்த இயக்கத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க அயராது உழைத்து, கதர்மூட்டையைத் தோளில் சுமந்து விற்று, மணிக்கணக்கில் மேடைகளில் முழங்கி, மனைவி யுடன் மதுவிலக்கு மறியல் நடத்தி சிறைப் பறவையாகவே வாழ்வை நடத்திய பெரியார், 'காங்கிரஸை ஒழிப்பதுதான் இனி என் ஒரே வேலை' என்று 1925-ல் காஞ்சி மாநாட்டில் சூளுரை செய்து வேதனையுடன் விலகினார். தமிழ்த்தென்றல் திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களும் ஒருவர் பின் ஒருவராக பெரியாரை பின்பற்றி காங்கிரஸைவிட்டு ஒதுங்கினர்.

சுயநலம் சார்ந்த போலி ஒழுக்கவாதிகளிடம் சிக்கிச் சீரழியத் தொடங்கிய காங்கிரஸை, தமிழகத்தில் கண் மூடிவிடாமல் காப்பாற்றிய பெருமை காமராஜருக்கு மட்டுமே உண்டு. அந்தத் தன்னலமற்ற அரசியல் துறவியால் ஈர்க்கப்பட்டவர்களால்தான் காங்கிரஸின் வாக்கு வங்கி சிதையாமல் இருந்தது. காமராஜர் இருந்த வரையில் காங்கிரஸ் என்ற மகாவிருட்சத்தை வேரறுந்து விழுந்துவிடாமல் பல்லாயிரம் விழுதுகள் பாதுகாத்தன. காங்கிரஸை தனியாக எதிர்க்க முடியாமல்... திராவிட இயக்கம் கூட்டணித் துணையோடுதான் தேர்தல் களத்தில் இறங்க முடிந்தது. அந்தப் பெருந்தலைவர் மறைந்த பின்பு, கழகங்களுக்குப் பல்லாக்குத் தூக்குவதையே தன் வாழ்காலக் கடமையாக்கிக்கொண்டது காங்கிரஸ்.

தமிழகத்தில் காங்கிரஸ் தன்னிலை தாழ்ந்ததற்கும், கழகங்களுக்கு குற்றேவல் செய்து பதவி சுகம் அனுபவிப்பதற்கும் முதற் காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி. அவர் காங்கிரஸை வழிநடத்தும் வரை என்னைப் போன்ற காமராஜ் தொண்டர்கள் தாங்கள் வளர்த்த கட்சியை விட்டு விலகி நின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தத் திறமையும், ஆற்றலுமற்ற கூஜாக்களின் கூடாரமாக காங்கிரஸை நீர்த்துப் போகச் செய்தார். கூஜாக்கள் அனைவருமே குள்ளர்கள். எப்போதும் குள்ளர்களின் சாம்ராஜ்ஜியத்தில் உயர மானவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நேரு, காமராஜ் காலத்து காங்கிரஸ், சோனியாகாந்தி காலத்தில் கூட்டணிக் கட்சியாகக் குறுகிப்போனது, இந்தக் குள்ளர் களால்தான்!

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் நாளுக்கு நாள் கரைந்து வருவதற்குரிய காரணங்கள் மிகவும் வெளிப்படையானவை. வாக்காளர்களைத் தங்கள் பக்கம் நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ள காந்தி, காமராஜர் போன்ற தன்னலமற்ற துறவிகளாகவோ பெரியார், ஜீவாவைப் போல் சமரசமற்ற சமுதாயப் போராளிகளாகவோ அண்ணா, கலைஞரைப் போல் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க தலைவர் களாகவோ எம்.ஜி.ஆரைப் போன்ற வள்ளல்தன்மையும் மனிதநேயரும் உள்ளவராகவோ இருக்கவேண்டும். தமிழ்நாடு காங்கிரஸில் அப்படி யாரும் இல்லை. இன்றிருப்பவர்கள் எல்லாம் வியர்வை சிந்தாமலே விளைச்சலை எதிர்பார்ப்பவர்கள்; தனிநபர் துதி பாடியே தலைவரானவர்கள்; டெல்லிக்குக் காவடி தூக்குவதே கட்சிப் பணி என்று கருதுபவர்கள்.

திராவிட இயக்கங்களில் ஆயிரம் குறைகள் இருந்தா லும், அந்தக் கட்சிகள் மக்கள் மத்தியிலேயே தொடர்ந்து இயங்கி வருகின்றன. தி.மு.க-வின் வாக்கு வங்கியைக் காப்பாற்ற கலைஞரும், அ.தி.மு.க-வின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதாவும் இருக் கின்றனர். அவர்கள் இருவரையும் வாக்காளர்கள் நெஞ்சில் நிறுத்தி அந்தக் கட்சியினர் வேட்பாளர்களுக்கு வெற்றியைத் தேடித் தருகின்றனர். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர்களோ, அவர்கள் பிறந்த ஊரில் தனியாக நின்றாலும் டெபாசிட் இழக்கக் கூடிய அளவுக்குச் 'செல்வாக்கு' பெற்றவர்கள்! இவர்கள் முகத்தைக் காட்டி எந்தத் தொகுதியில் யார்தான் வெற்றிபெற முடியும்? தன்னலமற்ற தியாகமும், நேர்மை யும் எளிமையும் நிறைந்த பொதுவாழ்க்கையும், மக்கள் நலன்நாடும் போர்க்குணம் என்ற எந்த ஒளிவட்டமும் தலைக்குப் பின்னால் இல்லாத தலைவர்களால் காங்கிரஸ் எப்படிக் காப்பாற்றப்படும்?

தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர்கள் என்று தாங்களாகவே அடையாளப்படுத்திக்கொண்டு அகம் மகிழும் மனிதர்களுக்குத் தெளிவான பார்வை இல்லை. மக்கள் நலனுக்காகப் போராடும் தார்மிக ஆவேசமும் இயக்கத்தைக் கடைசி கிராமத்து மனிதன் வரை கொண்டு சேர்க்கும் உந்துதலும் இல்லாமல் இரண்டு திராவிடக் கட்சிகளின் தோள்களில் சுகமாக ஏறி அமர்ந்து, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் எம்.பி.,

எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றுத் தரும் ஒரு தரகு நிறுவனமாகத் தன்னிலை தாழ்ந்துவிட்டது தமிழ்நாடு காங்கிரஸ்.

திராவிடக் கட்சிகளின் முப்பதாண்டு வேட்பாளர்கள் பட்டியலை ஆய்ந்து பார்த்தால்... அந்தக் கட்சிகளுக்காக உழைத்த எத்தனையோ புதிய மனிதர்களின் பெயர்களைப் பார்க்க முடியும். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸில் கொடிகட்ட ஒரு கூட்டம், கோஷமிட ஒரு கூட்டம், மேடை போட ஒரு கூட்டம், தேர்தலில் நிற்பதற்காகவே ஒரு கூட்டம் என்றிருக்கும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பத்து இடங்களில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தால் சிதம்பரம், இளங்கோவன், மணிசங்கர் அய்யர், சுதர்சனம் நாச்சியப்பன், வன்னியர்களுக்காக இடம் ஒதுக்கவேண்டி இருந்தால் கிருஷ்ணசாமி என்று ஏழு பேர் பட்டியலில் நிச்சயம் இருப்பார்கள். மீதமுள்ள மூன்று இடங்கள்கூட பலமுறை பதவி வகித்து நாற்காலி தேய்த்தவர்களைத்தான் சென்று சேரும்.

'இவ்வளவு குறைகளும் உள்ள கட்சியில் இத்தனை காலம் நீ ஏன் இருந்தாய்? இப்போதுதானே விலகி வந்தார்?' என்ற கேள்வி நியாயமானது. லண்டன் மாநகரின் சீரழிவு களைப் பட்டியலிட்ட ஆங்கிலக்கவிஞன் பைரன், 'With all thy Faults, I Still Love thee' என்று முடிப்பான். இவ்வளவு களங்கமிருந்தும், 'உன்னை நான் இன்னமும் காதலிக்கவே செய்கிறேன்' என்ற பைரனின் நிலையில்தான் நான் இருக் கிறேன். காங்கிரஸ் ஓர் ஆத்ம சோதனையில் ஈடுபட, அது மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கவேண்டும். ஆனால், எந்தச் சூழலிலும் அந்த இயக்கம் அழிந்து விடக்கூடாது என்று இன்றும் நான் பிரார்த்திக்கிறேன். இந்திய ஒருமைப்பாடும் மதச்சார்ப்பற்ற தன்மையும் இறுதிவரை காக்கப்பட, காங்கிரஸ் இருந்தாகவேண்டும் என்பது என் மாறாத நம்பிக்கை. சோனியா காந்தி யும், தங்கபாலுவும் காலாகாலமும் காங்கிரஸ் தலைமை பீடத்தில் இருக்கப் போவதில்லை. 'பறவைகள் வரலாம் போகலாம்; மகாவிருஷம் சாய்ந்து விடக் கூடாது' என்ற கவியரசர் கண்ணதாசனின் ஆசைதான் என் ஆசையும். தமிழின அழிப்பு என்பது காங்கிரஸின் கொள்கை இல்லை. அது சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் நடக்கும் மத்திய அரசின் கொள்கை என்ற தெளிவு எனக்கு இப்போது உண்டு.

அரசியல் கட்சிகளின் நம்பகத் தன்மை அவற்றுக்குத் தலைமையேற்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது. இன்றுள்ள நிலையில் எந்தக் கட்சியின் மீதும் எனக்கு நம்பிக்கை எழவில்லை. வாழ்வின் மிக முக்கியமான நாற்பதாண்டுகளை அர்த்தமற்று அரசியல் அரங்கில் வீணாக்கிவிட்ட கழிவிரக்கம் இதயம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இனி என் வாழ்வின் இறுதித் தருணம் வரை அரசியல் அரங்குக்கு அப்பால் நின்று சமூகநலன் சார்ந்து என் பேனாவின், பேச்சின் மூலமும் முனைப்பாகப் போராடுவேன். பணம் குவிக்கும் நோக்கமும் அதிகாரப் பதவியில் அடங்காத வேட்கையும் இல்லாமல் பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கும் அரசியல் சாராத மனித உரிமை அமைப்புகளுக்கும் வன்முறையற்ற அறவழியில் ஒரு நிறம் மாறாத நிஜமான காந்தியவாதியாகத் துணைநிற்பேன்.

நிற்க, முதல்வர் கலைஞரிடம் ஜூ.வி. கட்டுரையின் மூலம் கொஞ்சம் பேச விழைகிறேன். ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஒழிப்பு என்ற போர்வையில் நம் இனம் முற்றாக அழிக்கப்பட்டு வரும் நிலையில்... சிங்கள---பௌத்த பேரினவாத பாசிச அரசுக்குப் பக்கபலமாக நிற்கும் மத்திய அரசின் அணுகுமுறையை மான உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் அங்கீகரிக்க முடியாது. சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படியே மன்மோகன் சிங் அரசு நடந்துவருகிறது என்று காங்கிரஸை சார்ந்த மத்திய அமைச்சர்கள் வாய்மொழிவதை நீங்களும் அடிக்கடி வழி மொழிகிறீர்கள். அப்படியானால், சோனியாகாந்தியின் வழிகாட்டுதலில்தான், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படும் அவல நிலையை பாசிச வெறிபிடித்த ராஜபக்ஷே அரசு அரங்கேற்றுவதற்கு மறைமுகமாக நம் மத்திய அரசு உதவி வருகிறதா? ஈழத் தமிழர் இன்னல் குறித்து, இழப்பதற்கு எதுவுமற்றும், தப்புவதற்கு வழியுமற்றும் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடக்கும் நம் தொப்புள்கொடி உறவு குறித்து, மனித உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து இன்று வரை வாய் திறக்காத சோனியாகாந்தியின் கூட்டணி உங்களுக்குத் தேவையா?

'நான் இருக்கிறேன் உங்கள் கவலை தீர்க்க!' என்று எத்தனை பேர் சொன்னாலும், 'கலைஞரே! நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?' என்றுதான் ஈழத்தமிழரின் கண்கள் ஏக்கத்துடன் அலைபாய்கின்றன. அரசியல் நிர்ப்பந்தங்களால் உங்கள் போர்க்குணம் அழிந்துவிடக் கூடாது. உங்கள் தீந்தமிழ்ப் பேச்சும், எழுத்தும் தமிழினம் காக்கும் பாதுகாப்பு கவசங்கள் என்று நம்பும் உலகத் தமிழரின் நம்பிக்கை, எந்த நிலையிலும் நலிந்துவிடக் கூடாது. ஆட்சி நாற் காலிக்காக தமிழரின் நலனை நீங்கள் கைவிட்டதாக ஒரு களங்கம் உங்கள் வாழ்க்கை வரலாற்றின் எந்தப் பக்கத்திலும் இடம் பெறலாகாது.

இனவுணர்வற்ற காங்கிரஸ் கூட்டணியைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் தன்னிலை தாழ வேண்டிய தில்லை. காங்கிரஸ§டன் கைகோத்து நிற்கும் யாரும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிக மோசமான படிப்பினை பெறுவார்கள். பக்தவத்சலம் பரிவாரம், 'தி.மு.க-வின் தூண்டுதலால் மாணவர் போர்வையில் சில காலிகள் செய்யும் கலவரம்!' என்று இந்தி எதிர்ப்பை ஏளனமாக விமர்சித்தது. மக்களின் மனவுணர்வின் கொதிநிலையை உணராததன் விளைவு, 1967-ல் கோட்டையிலிருந்து வெளித்தள்ளப்பட்ட காங்கிரஸ், கடந்த நாற்பதாண்டுகளாக நட்டநடு வீதியில் நின்றுகொண்டிருக்கிறது.

அன்று நடந்தது மொழிப் போராட்டம். இன்று இனப் போராட்டம்! இதில் முன்னால் நின்று முகம் காட்டவேண்டிய நீங்கள், பின்னால் திரும்பி முதுகு காட்டலாமா? உங்கள் பொதுவாழ்வில் நேர்ந்திருக்கும் மிகப்பெரிய அரசியல் பிழை இது. ஆயிரம் முறை அரசியல் சதுரங்கத்தில் சாணக்கிய சாமர்த்தியத்துடன் காய்களை நகர்த்திய நீங்கள், இன்று ஏன் தவறாக வியூகம் அமைத்துத் தடுமாறுகிறீர்கள்? கலைஞர் அவர்களே, பல சந்திப்புகளில் என்னிடம் நீங்கள் பொழிந்த தூய அன்பில் மழை விழுந்த செம்மண் நிலமாக மனம் நெகிழ்ந்தவன் நான். சொல்லொணாத் துயரங்களில் ஈழத்தமிழர் இன்னலுறும்போது, குருடன் கூத்துப் பார்த்த கதையாக நடந்துகொள்ளும் சோனியாகாந்தி காங்கிரஸ§க்கு எதிராக, தமிழகம் கொதிநிலையில் இருப்பதை அறிந்து, அந்தக் கூட்டணியை உடனே கைகழுவுங்கள். அடுத்த கணம் மானமற்ற காங்கிரஸ், போயஸ் தோட்டத்தில் போய் நிற்கும். இடதுசாரிகள் அங்கிருந்து உங்களை நோக்கி இடம்பெயர்வார்கள். உங்கள் தலைமையில் பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் தமிழினவுணர்வுள்ள அமைப்புகள் அணிவகுக்கும். நாற்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி காணாமற்போகும். இடையில் உங்கள் அரசு கவிழலாம். 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் இனமாக இருக்கட்டும்!' என்று அடிக்கடி சொன்னவர் நீங்கள்தானே! முதல்வர் மகுடம் ஒரு முறை பறிபோனால்... மீண்டும் வரும். தமிழினத் தலைவர் என்ற தகுதி பறிபோனால்... வாழ்வில் மீண்டும் வராது. உங்கள் அன்புக்கினிய கவிஞர் அப்துல் ரகுமான் சொல்கிறார்,

'மகுடங்கள் இடம் மாறக் கூடியவை. உன் தலை மகுடத்தால் அலங்கரிக்கப்படுவதை விட, புகழால் அலங்கரிக்கப்படட்டும்!'

நன்றி: ஜூனியர் விகடன்

Reade more >>
Thursday, March 5, 2009 | 2 comments |
நாம் பிளாக்கரில் பின்னூட்டம் இடும் இடத்தில் காணப்படும் ஓபன் ஐடி பற்றிபலருக்கு தெரியாது.

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது.

அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன.

பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் சொல்ல கட்டாயப் படுத்துகின்றன.

இதுபோன்ற தளங் களை பயன் படுத்த அவர்கள் கேட்கும் விவரங் களையெல்லாம் கொடுத்து விட்டு கூடவே இ-மெயில் முகவரியையும் சமர்ப்பித்து நமக்கான பயன்பாட்டு பெயர் அதாவது யூசர் நேம் மற்றும் அதனை இயக்க கூடிய பாஸ்வேர்டு அதாவது கடவுச் சொல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தளத்தை எப்போது பயன் படுத்த வேண்டும் என்றாலும், பயன்பாட்டு பெயரை சமர்ப்பித்து கடவுச்சொல்லை தெரிவித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.

ஒரே ஒரு தளம் என்றால், இந்த முறையை பின்பற்றுவதில் எந்த சங்கடமும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல்வேறு தளங்களில் அவற்றின் சேவையை பயன்படுத்த இப்படி பல விதமான பயன்பாட்டு பெயரையும், கடவுச் சொல்லையும் உருவாக்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

இ-காமர்ஸ் தளங்கள், இ-மெயில் சேவை தளங்கள், பிரத்யேக ஆன் லைன் இதழ்கள், அரசு தளங்கள் என்று பலவற்றில் இப்படி தனித்தனியே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் அடையா ளத்தை உருவாக்க நேரத்தை செலவிட வேண்டியிருப்ப தோடு, பலவித அடையாளங்களை நிர்வகிப்பதும் சிக்கலாகி
விடுகிறது. கடவுச்சொல்லை மறந்து விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகளின் தகவல் தேடும் அனுபவம் சுமை மிக்கதாக மாறிவிடுகிறது.

இதற்கு தீர்வாக வந்திருக்கும் புதிய சேவைதான் ‘ப்ரீ யுவர் ஐடி’.

‘ஓபன் ஐடி டாட் நெட்’ இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து (ஒரே) ஒரு கடவுச்சொல்லை பெற்றுக் கொண்டீர்கள் என்றால் போதுமானது.

வேறு எந்த இணைய தளத்தை பயன்படுத்தும்போதும், உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது என்றால், ஓபன் ஐடி அடையாளத்தை சமர்ப்பித்தீர்கள் என்றால் போதுமானது.

உங்களைப் பற்றிய விவரங்களை ஓபன் ஐடி வழங்கி நீங்கள் தளத்தின் உள்ளே செல்ல கதவைத் திறந்து விடும். இதன் மூலம் கட்டண சேவை போன்ற தளங்கள் ஒவ்வொன்றுக் கும் தனித்தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்க வேண் டியதில்லை.

ஒரு கதவைத் திறந்தால், ஓராயிரம் கதவுகள் திறக்கும் என்பதுபோல, இந்த ஒரே ஒரு கடவுச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டெர்நெட் முழுவதும் உலா வரலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பாஸ்வேர்ட் சேவை போன்றதே இது. அதைவிட மேம்பட்டதாக இது இருக்கிறது என ஓபன் ஐடி மார்தட்டிக் கொள்கிறது.

நீங்களும் இங்கே www.openid.net சென்று பதிந்து கொள்ளுங்கள்.

Reade more >>
Saturday, January 24, 2009 | 0 comments | Labels:
நோக்கியா என் 78

நோக்கியா என் 78 மொபைல் போன் குறித்த புதிய தகவல் ஒன்று வெளிவந்துள் ளது. இந்த போன் முதலில் வடிவமைக்கப் பட்ட போது இதில் ஒரு எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர் இருந்தது.இந்த வசதியின் மூலம் இதில் பதிந்து இயக்கப்படும் பாடல்களை ஒரு எப்.எம். ரேடியோவை குறிப்பிட்ட அலை வரிசையில் ட்யூன் செய்து கேட்கலாம். இந்தியாவில் அண்மையில் இந்த போன் விற்பனைக்கு வந்த போது அதில் எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர் வசதி இல்லை. ஏனென்றால் இந்தியா உட்பட சில நாடுகளில்அரசின் அனுமதி இல்லாமல் எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர்களை இயக்கக் கூடாது.

எனவே அந்த நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு செல்கையில் எப்.எம். ட்ரான்ஸ்மிஷன் வசதி இல்லாமல் தயாரிக் கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதேபோல் வேறு சில மொபைல் போன்களிலும் எப்.எம் ட்ரான்ஸ்மீட்டர்வசதிஉள்ளது. சோனி எரிக்சன் டபிள்யூ 980 மொபைலில் இந்த வசதி உள்ளது. இந்தியாவில் இந்த வசதியுடன் போன் விற்பனையாகிறதா? அல்லது அதுஇல்லாமல் விற்பனையா கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.

கன்னட மொழியில் மொபைல் சேவை

கன்னட மொழியில் அமைந்துள்ள மொபைல் போன்களை ஏர்டெல் நிறுவனம்கர்நாடக மாநிலத்தின் கிராமப் புறங்களில் அறிமுகப்படுத் துகிறது. இதற்கெனஇந்தியன் பெர்டிலைசர் கூட்டுறவு அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுஇத்திட்டத்தை செயல்படுத்துகிறது. 2009 ஆம் ஆண்டுக்குள் கர்நாடகாமாநிலத்தின் 90 சதவிகித மக்களிடம் மொபைல் போன் பயன்பாட்டினைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஏர்டெல் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இன்னும் கிராமப்புற மக்கள் மொபைல் போனை அவ்வளவாக அங்குபயன்படுத்தத் தொடங்கவில்லை. கர்நாடகாவில் மொபைல் பயன்படுத்துவோர்எண்ணிக்கை ஒரு கோடியே 70 லட்சமாக இருந் தாலும் இதில் கிராமப் புறமக்களின் எண்ணிக்கை (13%) மிகக் குறைவு தான். எனவே தான் கிராமப் புறமக்களுக்கு புரியும் வகையில் கன்னடத்தில் டிஸ்பிளேயுடன் கூடிய மொபைல்போன்களை ஏர்டெல் அறிமுகப்படுத்துகிறது.

சாம்சங் மோட்டாரோலாவை முந்தியது

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத மொபைல் போன் விற்பனையில் சாம்சங்நிறுவனம் மோட்டாரோலாவினைப் பின் னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப்பிடித்தது. வழக்கம் போல் முதல் இடத்தை நோக்கியாவும் இரண் டாவது இடத்தைசோனி எரிக்சன் நிறுவனமும் கொண்டுள்ளன. இதுவரை மோட்டாரோலாமூன்றாவது இடத்தில் இருந்தது. ஆனால் ஜனவரி முதல் மார்ச் வரை யிலானகாலத்திய விற்பனையில் சாம்சங் இந்த இடத்திற்கு வந்துள்ளது

ஜனவரியில் 5.7% கூடுதலாகவும் மார்ச்சில் 7% கூடுதலாகவும் ஸ்டெடியாகஉயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளது. மோட்டாரோலா இச்சந்தையில் தான்கொண்டிருந்த 6.7% பங்கினை விட்டு 5.9% க்கு வந்துள்ளது. சோனி தொடர்ந்து 8.1% இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனம் வெளியிட்ட குரு 100 மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று சாம்சங் நிறுவனத்தைஉயர்த்தியுள்ளது. பன்னாட்டளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சாம்சங்இந்தியா வில் தன் பங்கினை உயர்த்தும் வகையில் பல புதிய மாடல்களைஅனைத்து நிலைகளிலும் இறக்கு கிறது.

மோட்டோ ரோக்கர் இ–8

மோட்டாரோலா நிறுவனம் அண்மையில் வழக்கத்திற்கு மாறான புதுவசதிகளுடன் மொபைல் போன் ஒன்றினை மோட்டோரேக்கர் இ8 என்ற பெயரில்வெளியிட்டுள்ளது. அண்மையில் சவுண்ட் பஸ் என்னும் நிறுவனத்தைமோட்டாரோலா நிறுவனம் கையகப்படுத்தியது. அதன் விளைவாக இந்தபோனில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு பல புதிய வசதிகள்தரப்பட்டுள்ளன.

சவுண்ட் பஸ் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து மியூசிக் மற்றும் வீடியோசார்ந்த பல பைல்களை மொபைல் போனில் டவுண்லோட் செய்து இயக்கலாம். இந்த போனில் மோட் ஷிப்ட் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம்ஜஸ்ட் ஒரு பட்டனை அழுத்தி போனை ஒரு மியூசிக் பிளேயராக மாற்றலாம்.

பாஸ்ட் ஸ்குரோல் தொழில் நுட்பம் பாடல்களைத் தேர்ந்தெடுக்க விரைவாகச்செயல்படும் வழி ஒன்றைத் தந்துள்ளது. இதன் கீ பேட் தோற்றத்தில் மட்டுமேதெரியும். போனை அணைத்துவிட்டால் இந்த கீ பேடை பார்க்க முடியாது. அதேபோல போனை மியூசிக் பிளேயராகப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் போன்டயல் கீ பேட் மறைந்து மியூசிக் பிளேயருக்கான கீ பேட் காட்டப்படுகிறது. அதில்பாடல் இயக்க, முன்னோக்கி தள்ள, பின்னோக்கிச் செல்ல, தற்காலிகமாகநிறுத்தவென கீகள் தெரிகின்றன. MIDI, MP3, AAC, AAC+, Enhanced AAC+, WMA, WAV, AMRNB, Real Audio (RA) v10 என்ற பலவகையான பார்மட்களில் உள்ள பாடல்களைஇதுஇயக்குகிறது.

மியூசிக் பிளேயராக இயங்குகையில் முப்பரிமாணத்தில் இரண்டு சேனல்ஆடியோ கிடைக்கிறது. ஸ்பீக்கரும் எப்.எம். ரேடியோவும் இதில்இணைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்டல் டாக் தொழில் நுட்பம் மூலம் பாடல்கள்தெளிவாகக் கிடைக்கின்றன. 100 கிராம் எடையில் 10.6 மிமீ தடிமனில் இந்தபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 அங்குலத் திரையில் அகலவாக்கிலும் காட்சிகிடைக்கிறது.

இதன் மெமரி 2 ஜிபி. இதனை 4 ஜிபி வரை கூடுதலாக்கலாம். இதனுடன் ஒருபோர்ட்டபிள் ஸ்பீக்கரும் தரப்படுகிறது. இதனை எந்த மியூசிக் பிளேயர், மொபைல் போன் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைத்து இயக்கலாம். இதன் விலை ரூ. 15,455 மற்றும் ரூ.13,999. அண்மையில் இந்த போன்கள்மும்பையில் அபிஷேக் பச்சனால் வெளி யிடப்பட்டன.

எல்.ஜி.– கே.எப் 600

எழுதுவதைப் புரிந்து டெக்ஸ்ட்டாகக் கொள்ளும் வித்தை மற்றும் சிறப்பானகேமரா என அசத்தும் வசதிகளுடன் எல்.ஜி. நிறுவனத்தின் கே.எப்.– 600 மொபைல்வெளிவந்துள்ளது. முதலில் நம்மைக் கவர்வது இதன் தோற்றமே. அருமையானமிக மென்மையான ஸ்லைடராக உள்ளது. எடை 107 கிராம் என்றாலும் அதுபெரிய குறையாகத் தெரியவில்லை.

240 து 320 ரெசல் யூசனுடன் கூடிய திரை பளிச் என அழகாகத் தெரிகிறது. இதன்இன்னொரு சிறப்பம்சம் கீழாக உள்ள 1.4 அங்குல திரையும் அதே ரெசல்யூசனில்இருப்பதுதான். அடுத்ததாக வழக்கமான நேவிகேஷன் பேட் இல்லாமல் மெனுமற்றும் பிற வசதிகளைப்பெற இன்டராக்டிவ் பேட் ஆகச் செயல்படும் டச்சென்சிடிவ் திரை தரப்பட்டுள்ளது.

முதன் முதலில் சாம்சங் தன் யு–900 மொபைலில் இந்த வகை திரையைத் தந்தது. ஆனால் அதைக் காட்டிலும் சிறப்பாக இந்த திரை உள்ளது. போனின் பக்கவாட்டில்யு.எஸ்.பி. மற்றும் பேட்டரி சார்ஜிங் போர்ட் உள்ளது. இதற்கும் கீழாக கேமராதரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நேவிகேஷன் பேடினைச்செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியும். சிறிய ஸ்டிரிங் கொண்டு இணைக்கக்கூடிய ஸ்டைலஸ் ஒன்று தரப்படுகிறது. ஆனால் அளவில் இது ஒரு லிப்ஸ்டிக்போல தோற்றமளிக்கிறது. காலண்டர், கன்வெர்டர், அலாரம்,மெமோ மற்றும்ஸ்டாப் வாட்ச் போன்ற வழக்கமான வசதிகள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. சிறப்பான அம்சம் என்றால் முப்பரிமாணத்தில் தரப்படும் உலகக் கடிகாரத்தினைச்சொல்லலாம்.

தொலைந்து போனால் தேடுவதற்கு வசதியாக மொபைல் ட்ரேக்கர் தரப்பட்டுள்ளது. எழுதினால் புரிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றும் வசதியும் பலரால்விரும்பப்படும். விரல்களில் கூட இந்த திரையில் எழுதலாம். ஆடியோபிளேயரிலும் அதிக வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள எப்.எம். ரேடியோ நாம் நகர்ந்து கொண்டிருக்கும்போதும் தெளிவாக சிக்னல்களை பிக் அப்செய்கிறது. இதில் வீடியோ பிளேயர் இருந்தாலும் அதனை மீடியா போல்டரில்வைக்காமல் மை ஸ்டப் என்ற போல்டரில் வைத்துள்ளனர்.

ஏ2 டி பி வசதி உள்ளதால் வயர்லெஸ் ஹெட்செட் இணைத்து பாடல்களைக்கேட்கலாம். இதன் கனெக்டிவிடியும் சிறப்பாகச் செயல் படுகிறது.ஆனால் ஒருசின்ன பிரச்னை. பெர்சனல் கம்ப்யூட்டருடன் இதனை இணைக்கையில் போன்ஆப் ஆகிவிடுகிறது. அந்நேரத்தில் யாரும் நம்மை அழைத்தால் நமக்கு சிக்னல்கிடைக்காது. பல ஆப்ஷன்களுடன் கூடிய 3 மெகா பிக்ஸெல் கேமரா நல்லபிளாஷுடன் செயல்படுகிறது. செல்ப் டைமர், கை நடுக்கம் நீக்குதல், ஆறுபடங்களை அடுத்தடுத்து எடுக்கும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் குறியிட்ட விலை ரூ. 14,990

ஸ்பைஸ் எஸ்–525

ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையில் எஸ் 525 என்ற மொபைல் போனை விற்ப னைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் உள்ளஎப்.எம். ரேடியோவின் ஒலி பரப்பினை ஒரு பட்டனை அழுத்தி ரெகார்ட் செய்திடும்வசதி தரப்பட்டுள்ளது. 77 கிராம் எடையில் 17.6 மிமீ தடிமனில் கைக்கு அடக்கமாகவடிவமைக்கப்பட்டுள்ளது. ஷெட்யூல் இயக்கம், சிங்– டோன், 500 முகவரிகள்கொண்ட அட்ரஸ் புக், ஸ்பீக்கர் போன் எனப் பல வசதிகளும் உள்ளன. போன்தொலைந்து போனால் கண்டுபிடிக்க வழி தரும் மொபைல் ட்ரேக்கர் வசதியும்இதில் தரப்பட்டுள்ளது.

திருடப்பட்ட போனில் வேறு ஒரு சிம் கார்டு பயன்படுத்தப் பட்டால் அதன்எண்ணை போனின் உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் வகையில்போனில் செட் செய்திடலாம். அத்துடன் குறிப்பிட்ட சில எண்களிலிருந்து வரும்கால்களையும் வரவிடாமல் தடுக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்துமணி நேரம் பேச முடியும்; அல்லது 200 மணி நேரம் சார்ஜ் நீடிக்கும். ஓர் ஆண்டுவாரண்டியுடன் இந்த போனின் விலை ரூ. 2,099 என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்.டி.சியின் பி 3350

இந்தியாவில் உள்ள இசை ரசிகர்களுக்கு இந்த போன் என்ற அறிவிப்புடன்எச்.டி.சி. நிறுவனம் அண்மையில் எச்.டி.சி. பி 3350 என்ற மொபைல் போனைஅறிமுகப் படுத் தியுள்ளது. கிராபைட் சில்வர் கூட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளஇந்த போனில் 360 கோணத்தில் சுழலும் வண்ணம் ஸ்குரோல் வீல்தரப்பட்டுள்ளது.

சில சிறப்பு செயல் பாடுகளுக்கென தனியாக 8 கீகள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மொபைல் இயக்கத் தொகுப்பில் இது இயங்குகிறது. 2 மெகாபிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 2.8 அங்குல வண்ணத் திரை, எப்.எம். ரேடியோ, அதிவேக லேன் கட்டமைப்பு, ஆடியோ மேனேஜர், பத்து பேண்ட் ஈக்கு வலைசர்எனப் பல்வேறு வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் மொபைல் தொகுப்பு இணைத்துத் தரப்படுவதால் வேர்ட், எக்ஸெல் மற்றும் பிரசன்டேஷன் பைல்களை எளிதாக இதில் இயக்கலாம். பி.டி.எப். பைல்களைப் பார்க்க அடோப் ரீடர் தொகுப்பும் தரப்பட்டு உள்ளது. இன்டர்நெட் ஷேரிங், ஆடியோ மேனேஜர், ஆடியோ பூஸ்டர் ஆகிய வசதிகளும்தரப்பட்டுள்ளன. நான்கு பேண்ட் இயக்கம், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் புளுடூத்மூலம் கனெக் டிவிடி கிடைக்கிறது.
நன்றி: கார்த்திக்
Reade more >>

அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க, இந்தியாவில் சட்டம் கொண்டு வருவோம் என்று அந்த மாநாட்டில் அவர் பேசியதாக திடுக்கிடும் செய்தி வந்தது.

ஆணும் ஆணும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் சேர்ந்து கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்த வக்கிர உறவிற்குப் பெயர்தான் ஓரினச் சேர்க்கை என்பதாகும். இதற்கு ஒரு தமிழ் மகன் ஆதரவா? எண்ணிப் பார்க்கவே இதயம் நடுங்கியது.

ஆணும் ஆணும் குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் குடித்தனம் நடத்தலாம். இது என்ன கொடுமை? அப்படியானால் குடும்ப உறவுகள், மரபுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வேண்டுமா?

ஓரினச் சேர்க்கையை தமிழ்ச் சமுதாயம் அங்கீகரித்ததாகவோ ஆதரித்ததாகவோ எந்த இலக்கியத்திலும் எந்தத் தமிழ்க் கல்வெட்டிலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லி ஆங்கிலத் தொலைக்காட்சியைத் தற்செயலாகத் திருப்பினோம். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல் தந்தனர்.

ஓரினச் சேர்க்கை என்ற அநாகரிகத்திற்கு ஆட்பட்டு விட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்மீது மத்திய அரசின் கருத்தை உயர்நீதிமன்றம் கேட்டது.

`ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை, `ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

விரும்பிய ஓர் ஆணும் இன்னொரு ஆணும் குடும்ப வாழ்க்கை நடத்தினால் அவர்களுக்குத் தண்டனை தரக் கூடாது என்பதுதான் உயர்நீதி மன்றத்தை நாடிய ஓரினச் சேர்க்கையாளரின் கோரிக்கை. ஆஹா! அற்புதம்! அது வேதங்கள் கொள்கை கோட்பாடு என்று அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று உள்துறை தாக்கல் செய்த மனு கூறுகிறது. நல்லவேளை அந்தத் துறைக்கு சீழ்பிடித்த சிந்தனைகள் உதயமாகவில்லை.

`தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ரகசியமாக மறைமுகக் குடித்தனம் நடத்துகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் அளித்து விட்டால் பகிரங்கமாக வாழ்வார்கள். அப்படி வாழும் போது எய்ட்ஸ் நோய் வர வாய்ப்பில்லை. மறைமுக உறவுகள் அந்த நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்' என்பது மத்திய சுகாதாரத் துறையின் வாதம்.

ஓரினச் சேர்க்கை என்பது இந்திய கலாசாரச் சீரழிவின் உச்சகட்டம். அதனை அனுமதிப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டிற்கு விதிக்கப்படும் மரணதண்டனை.
முன்னர் ரஷ்யா சென்றிருந்தோம். மாஸ்கோ வானொலி தமிழ் ஒலிபரப்பில் சகோதரர் மணிவர்மா பணி செய்து கொண்டிருந்தார். அவர் கார்வண்ண கரியமேனியன். அவரை சோவியத் சகோதரி காதலித்து மணம் புரிந்து கொண்டார். அவர் ஆப்பிள் நிற அழகி.

அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது, `எப்படி அம்மா இவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?' என்று கேட்டோம். கலகலவெனச் சிரிப்பலைகள் எழுந்தன.

அந்தச் சகோதரி சொன்னார். `நான் தமிழ் கற்றவள். தமிழர் பண்பாடு தெரிந்தவள். அந்தப் பண்பாடு வேறு எங்கும் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் உயர்ந்த பண்பாடாகும். அந்தப் பண்பாட்டை மணந்திருக்கிறேன்!' என்றார் அந்தச் சுந்தரி.

நாம் எவ்வளவு பெரிய நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்பது அப்போதுதான் என் மூளையில் உறைத்தது. ஆனால் இங்கே அன்புமணிகள் அதிய ராகம் பாடுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புகைப்படத்தோடு ஒரு செய்தி வந்தது. வயது முதிர்ந்த ஜெர்மன் தம்பதியர் ராமேசுவரம் வந்தார்கள். ஆலயம் சென்றார்கள். தமிழர் பண்பாட்டின்படி இதுவரை வாழ்ந்திருக்கிறோம். மீண்டும் எங்களுக்குத் தமிழர் மண முறைப்படி திருமணம் நடத்துங்கள் என்று அவர்கள் கோரினர். மணவிழாவும் நடந்தது.

இந்தியாவில் எத்தனையோ தேசிய இனங்கள் இருக்கின்றன. அதில் தமிழ் மண்ணின் திருமண முறைதான் தலைசிறந்தது என்பது அந்த ஜெர்மன் தம்பதியர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

நமது குடும்ப உறவுகள் - மண முறைகள் இன்று நேற்று தோன்றியது அல்ல. சிந்துவெளி நாகரிகம் கண்ட எம் மூதாதையர் தந்த சீதனம்தான் உலகம் மெச்சும் நமது உறவுமுறைகள். அந்த உறவின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்தவை. இன்றுவரை அந்த நாகரிகத்தின் ஈரவரிகள் உலர்ந்து போகவில்லை.

அந்த மணமுறையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல் பெற்று பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது. பலதார மணம் கடந்து, `ஒருத்திக்கு ஒருவன்' என்ற கோட்பாட்டை எட்டினோம்.

காலவெள்ளத்தில் நமது குடும்ப உறவுகள் கரைந்து போனதில்லை.
ஆனால் இன்றைக்கு அந்தப் பண்பாட்டிற்கே கல்லறை எழுப்பத் துடிக்கிறார்கள். மேலைநாடுகளின் வக்கிர மனிதர்கள் வளர்க்கும் விபரீத உறவுகளுக்கு இங்கே அங்கீகாரம் தேடுகிறார்கள். வேரில் வெந்நீர் ஊற்றப் பார்க்கிறார்கள்.

லட்சம் பேருக்கு அதிகபட்சம் ஐம்பது பேர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். நாங்கள் இப்படித்தான் வாழ்வோம். எங்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தைத் திருத்துங்கள் என்று மேலைநாடுகளில் மைதானங்களிலும் பூங்காக்களிலும் அவர்கள் கட்டிப் புரள்கிறார்கள். அவர்களுக்காக வாதாட அடகுபோன சிலரும் இருக்கிறார்கள்.
மிருகங்களில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. பறவைகளில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. ஆனால் குப்பைமேட்டு மனிதர்கள் சிலர் அந்தக் கொடுமையான வாழ்க்கை நடத்துவோம் என்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கிருந்து எப்படிப் பணம் கொட்டுகிறது என்றே தெரியவில்லை. செல்வந்தர்களில் அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மேலைநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சிம்மாசனங்களையே வளைக்க முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள்.

ஆனால் இந்தப் பழம் பெரும் பூமி அத்தகைய அநாகரிகச் சட்டங்களை அண்ட விட்டதில்லை. நமது சட்டம் என்ன சொல்கிறது? ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 397வது சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று கூறுகிறது.

ஆனால் அந்தத் தண்டனையை ரத்து செய்து அந்த அநாகரிக உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். அண்மையில் சென்னை வந்த அவர், ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பிரதமரைச் சந்திப்பேன். கோரிக்கை மனுக் கொடுப்பேன் என்றார்.
ஓரினச் சேர்க்கையை அனுமதித்த பின்னரும் எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் பரவாது என்பதற்கு அவர் என்ன உத்தரவாதம் தருகிறார்?

பால்வினை நோய் பரவுவதற்கு ஓரினச் சேர்க்கை ஒரு காரணம் என்றால், அதனைத் தடுப்பதற்குத்தானே வழிவகை காண வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தக் கலாசாரச் சீரழிவை அங்கீகரித்தால் போதும் என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

ஒரு பக்கம் புகைபிடித்தால் 500 ரூபாய் வரை அபராதம் என்கிறார். இன்னொரு பக்கம் மானக்கேடான ஓரினச் சேர்க்கைக்கு விதிக்கும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இப்படி வேடிக்கை மனிதர்கள் விநோதத் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

சென்ற வாரம் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜை நிருபர்கள் சந்தித்தனர். `ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா' என்று கேட்டனர். `கர்மம் கர்மம்' என்றார் அவர். `பின்னர் ஏன் அதற்காக வாதாடுகிறார்கள்' என்று கேட்டனர்.

`எனக்கு வயதாகிப் போய் விட்டது. அவர்களையே கேளுங்கள்' என்றார் பரத்வாஜ்.

ஒரு பக்கம் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் என்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் தாங்கள்தான் இன்றைய காவலர்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக நியாயங்களையே சவக்குழிக்கு அனுப்பும் வாதங்களை முன் வைக்கிறார்கள். அதிசய ராகம் பாடுகிறார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
Reade more >>
Friday, November 21, 2008 | 1 comments | Labels:

சுழன்றடித்த சுனாமிக்குப் பிறகு தமிழக தட்பவெப்ப நிலையில் நிறைய மாற்றங்கள். கோடையில் அதீத அனல், குளிர்காலத்தில் மழையும் குளிரும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலை. இதன் தாக்கம் கடலிலும் எதிரொலிப்பதால் குமரி முதல் சென்னை வரை வரை பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்பி, ஆர்ப்பரிக்கின்றன. கடலை நம்பியே வாழும் மீனவர்கள், தமிழக மக்களின் மனதில் பயம்; பீதி. என்னவாயிற்று இயற்கைக்கு?``


காற்று மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதுதான் இதற்கு மூல காரணம். சுருக்கமாக `குளோபல் வார்மிங்'. இதனால் கடல் மட்டம் உயர்ந்து நீர் நிலத்திற்குள் வரும். குறிப்பா சென்னை நகரத்திற்கு இந்த ஆபத்து அதிகம்!'' என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல புவியியல் நிபுணரும், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான டாக்டர் ராமச்சந்திரன்.


``உலகின் தென்துருவமான அண்டார்ட்டிகா முழுவதும் பனிமலைகளின் ஆதிக்கம். மனிதர்கள் உயிர்வாழ முடியாத அளவு ரத்தத்தை உறைய வைக்கும் வெப்ப நிலை. ஆனால் கடந்த பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிற பனிக்கட்டிகள் மெல்லமெல்ல உருக ஆரம்பிச்சிருக்கு. இதற்குக் காரணம் அங்கே 0.5 முதல் 1% வரை வெப்பநிலை உயர்ந்திருப்பதுதான். இதனால் கடல் நீர்மட்டம் 28 செ.மீ. உயரம் என்கிற அசாதாரண நிலையைத் தொட்டிருக்கு.


1980-க்குப் பிறகு ஆராய்ச்சிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கு'' என்று சொல்லும் ராமச்சந்திரன், ``இப்போதிருக்கும் உலக வெப்ப நிலையில் 2% உயர்ந்தாலே போதும், ஆபத்து நிச்சயம்'' என்கிறார்.


ஏற்ற இறக்கமான தட்பவெப்ப நிலைக்கு மற்றொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது `எல் நினோ'. தென்அமெரிக்க நாடான `பெரு'வில் பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தில் உண்டாகும் மாற்றம்தான் `எல் நினோ'. உலகின் மேற்குப் பகுதியில் உயரமாக இருக்கும் இந்த நீரோட்டம், கிழக்குப் பக்கம் சற்று தாழ்வாக இருக்கும். அதன் காரணமாக கடல்நீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டத்தை உயர்த்துகிறது.சரி, பனிப்பாறைகள் உருகுவது இயல்புதானே. இயற்கை அதனை சமன் செய்து கொள்ளாதா?


``அப்படிச் சொல்ல முடியாது. உதாரணமா லார்சன் - ஏ. இவை அண்டார்ட்டிகாவில் இருக்கும் மிகப்பெரிய பனிப்பாறைகள். நான்காயிரம் ஆண்டுகள் பழமையானவை. பொதுவா மிக அதிக வெப்பம் தாக்கினாலன்றி பனிப்பாறைகள் எளிதில் உருகாது. ஆனால் தற்போது லார்சன்-ஏ பனிப்பாறைகள் உருகிக்கிட்டிருக்கு. இதனால் நீரின் அடர்த்தி, வெப்ப நிலை, காற்றின் வேகம்... உள்ளிட்டவற்றில் நிறைய மாற்றங்கள். இயற்கையின் போக்கையே இந்த மாற்றங்கள் புரட்டிப் போட்டுவிடும்'' என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார் ராமச்சந்திரன்.


`பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்தாலும், தமிழகத்திற்கு ஆபத்து உண்டா?' - என்ன சொல்கிறார் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராய்டு?


``இப்போ நாம மக்கிப் போன பொருட்களிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல், அனல் மின்சாரத்தைத்தான் எரிபொருட்களா பயன்படுத்துறோம். இதனால் காற்று மண்டலம் முழுவதும் கார்பன்_டை_ஆக்ஸைடின் அளவு எகிறுது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடல் பகுதியின் பரப்பளவு மிக நீ... ளம்.


குறிப்பா, கடலின் ஆழ்பகுதிக்கும் தரைப்பகுதிக்கும் இடையே உள்ள `மீன் ஸீ லெவல்' (எம்.எஸ்.எல்.) சென்னையில் மிகவும் குறைவு. உதாரணமா, ஊட்டியில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு மூவாயிரம் அடி. ஆனால் சென்னையில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு என்ன தெரியுமா? ஒரு அடிக்கும் குறைவு. சென்னையில் ராயபுரம் முதல் திருவான்மியூர் வரை இதுதான் நிலை. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டம் உயரும் போது சென்னைக்கு பாதிப்பு நிச்சயம்!' எனச் சொல்லும் ராய்டு, மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்துவதும், கடல்வாழ் தாவரங்களை வளர்ப்பதும் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று `பாசிட்டிவ்'வாகப் பதில் சொல்கிறார்..


``லேட்டஸ்ட்டாக இமய மலையை ஆய்வு செய்து வரும் டெல்லியைச் சேர்ந்த புவி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று `குளோபல் வார்மிங்' காரணமாக இமயமலையில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், இன்னும் 15 ஆண்டுகளில் பனிப்பாறைகள் முழுவதும் உருகி வெறும் கற்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர் மட்டம் உயர்ந்து சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடலில் மூழ்கும் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
Reade more >>
Sunday, November 9, 2008 | 3 comments | Labels:

சில மேனிலைப்பள்ளிகளில் 100-க்கு 88 மாணவர்கள் ஃபெயில். 50 விழுக்காடு தேர்ச்சி பெற்றவை ஒரு சில பள்ளிகள் தான். இப்படி கல்வியில் தாழ்ந்து தலைகுனிந்து நிற்கும் கடலூர் மாவட்டத்தில் மாணவர்களில் தரத்தை உயர்த்துவது எப்படி? மாவட்டத்திலுள்ள 42 மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அழைத்துக்கூட்டம் போட்டார் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ!
"நமது கவனம் சிதையக்கூடாது. ஆகவே முதலில் நமது செல்ஃபோன்களை ஆஃப் செய்து விடுவோம்". என்ற அறிவிப்போடு பேச்சைத் தொடங்கினார்.இடையில் ஒரு செல்ஃபோன் இடைவிடாமல் அலற, சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார் கலெக்டர்.... அலறியது சேத்தியாதோப்பு பெண்கள் மேன்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சந்திராவின் செல்போன் என்பதைக்கண்டறிந்தார்.
"ஏம்மா ஆஃப் பண்ணலை?" கொஞ்சம் கோபமாகக் கேட்டார். ஆசிரியை கண்கள் கலங்கி விட்டன. "எனக்கு ஆஃப் பண்ணத்தெரியலை சார்!" உண்மையைச் சொன்னார் ஆசிரியை.
"ஒரு தலைமை ஆசிரியை இது கூடத் தெரியாமல் இருக்கலாமா?" தலையில் அடித்துக் கொண்ட கலெக்டர், மற்ற தலைமையாசிரியர்களைப் பார்த்து "நான் பேசியதை எல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டீர்களா?" என்றார். "இல்லீங்க சார்!" எல்லாரும் தலையாட்டினார்கள். "சரி போகட்டும்... நான் என்ன சொன்னேன்னு சொல்லுங்க பார்ப்போம்", கீரப்பாளையம், கருப்பேரி பள்ளித் தலைமையாசிரியர்களைப் பார்த்துக்கேட்டார்.
கடைசி பெஞ்ச் மாணவர்களைப் போல திருதிருவென விழித்தார்கள் அந்த ஆசிரியர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கடலூர் மாவட்டத்தின் கல்வித்தரத்தை எப்படி மேம்படுத்துவது?
நன்றி: நக்கீரன் (05-07-2008)
Reade more >>
Wednesday, July 9, 2008 | 1 comments | Labels:
பொறுப்பற்ற பெட்ரோல் பங்க்கள். (சுடச்சுட சுட்டது.... நன்றி: சேவியர், http://srippu.wordpress.com/)

நேற்று இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு ஒருவழியாக இரவு பத்து மணிக்கு காரில் கிளம்பினேன். கொஞ்ச நேரத்திலேயே காரின் உள்ளே மஞ்சள் விளக்கு பல்லிளித்தது. அடக்கடவுளே பெட்ரோல் தீர்ந்து விட்டது.
பரவாயில்லை. குரோம்பேட்டையிலிருந்து வேளச்சேரி செல்வதற்குள் குறைந்தபட்சம் பத்து பெட்ரோல் பங்க் கள் இருக்கின்றன எங்காவது ஒரு இடத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே காரை ஓட்டினேன்.


குரோம்பேட்டை பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்க் வாசலில் ஒரு பெரிய ட்ரம் கயிறுகளுடன் கட்டப்பட்டிருந்தது. “ஸ்டாக் தீந்து போச்சு சார்” பதில் வந்தது.
அடுத்த இடத்தில் விளக்கையும் அணைத்து விட்டிருந்தார்கள்.
இதே நிலை தான் வேளச்சேரி வரை. எல்லா பெட்ரோல் பங்க்களும் இரவு பத்து மணிக்கே மூடப்பட்டு, வழி அடைக்கப்பட்டு இருட்டுக்குள் கிடந்தன.
காரணம் நள்ளிரவுக்கு மேல் விலையை ஐந்து ரூபாய் ஏற்றிக் கொள்ளலாம் எனும் அறிவிப்பு.


நண்பனுக்கு தொலைபேசினேன், மவுண்ட் ரோடு பக்கம் ஏதாவது பெட்ரோல் பங்க் திறந்திருந்ததா என அறிந்து கொள்ள. “எல்லாம் சாயங்காலமே மூட ஆரம்பிச்சுட்டாங்க” என்றான் அவன்.

எரிச்சலும், கோபமும், வழியில் வண்டி நின்று விடக் கூடாதே எனும் பயமுமாக வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் – என்று ஏன் பெட்ரோல் விலை உயர்வு வருகிறது என்பது புரியவே இல்லை. அதனால் ஏற்படும் அவஸ்தைகளுக்கு அளவே இல்லை.

மிக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாகனம் நின்றிருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

11.59 வரை ஸ்டாக் இல்லாத பெட்ரோல் பங்க் கள் 12.00 மணிக்கு எப்படி சட்டென திறந்து கொள்கின்றன ? ஸ்டாக் எங்கிருந்து வருகிறது என்பதெல்லாம் பூச்சாண்டிக் கதைகள் என்பதை மழலைகளே விளக்கும்.
விலையை உயர்த்தி சட்டமியற்றும் அரசு, நள்ளிரவு நேரம் வரை கடைகளை மூடக்கூடாது என்று சட்டம் இயற்ற முடியாதா ? அல்லது தேவையில்லாமல் இரண்டு மூன்று மணி நேரம் ஒட்டு மொத்தக் கடைகளையும் அடைத்து சமூகத் தேவையை மதிக்காத இந்த பங்க்களை என்ன செய்வது ?

இந்த சில மணி நேர லாபத்துக்கே இப்படிச் செய்பவர்களை நினைக்கும்போது ஒன்று சட்டென மனதில் தோன்றியது. தனியார் மயம் எத்தனை கொடுமையானது ? வெறும் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இவர்களிடம் ஒரு உதாரணத்துக்காக போக்குவரத்தை ஒப்படைப்பதாய் வைத்துக் கொண்டால், நெரிசல் நேரங்களில் மட்டுமே பஸ் ஓடும். காலையில், இரவில், மதிய நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்தால் பஸ் ஓடாது இல்லையா ?

செய்தித் தாளில் திருத்தப்பட்ட பெட்ரோல் விலை என்று ஒரு விலை போட்டிருந்தார்கள். காலையில் பெட்ரோல் நிரப்பியபோது வேறோர் விலையில் இருந்தது.

அதிலும் ஸ்பீட், பவர், சக்திமான் என்றெல்லாம் பெயரிட்டழைக்கும் பெட்ரோல் லிட்டர் 60 ரூபாயையும் தாண்டி !!! இதுக்கெல்லாம் என்ன நிர்ணயம் என்பது விளங்கவில்லை. 52 ரூபாய்க்கு விற்ற பவர் பெட்ரோல் 60 ரூபாய் எனில் 8 ரூபாய் விலையேற்றம். அது அனுமதிக்கப்பட்டது தானா ? அதுக்கு 5 ரூபாய் விலையேற்றம் பொருந்தாதா ? என்பதெல்லாம் ஒரு சாமான்யனின் விடை தெரியாத கேள்விகள்.

Reade more >>
Thursday, June 5, 2008 | 1 comments |
தினமணிக் கதிரிலிருந்து தகவலுக்காக....
ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது ஒரு மனிதனுக்கு புதியதோர் உலகத்தைத் திறந்துவிடுவதைப் போன்றது. அதிலும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதினால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றால் புதிய வாழ்க்கைக்கான நுழைவாயிலாகவே அந்த மொழி மாறிவிடுகிறது. உலகமெங்கும் தனது நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது ஜப்பான். ஜப்பான் நிறுவனங்களில் வேலை செய்ய ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது அவசியம். ஜப்பானிய மொழியைக் கற்றுத் தரும் நிறுவனம் ஒன்று சென்னை அண்ணாநகரில் எஸ் அன்ட் என் ஹயகாவா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.ஹயகாவா. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

ஜெ.ஹயகாவா
ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது?
ஜப்பான் நாட்டின் ஸôஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். ஸôஃப்ட்வேர் மட்டுமில்லை, ஆட்டோமொபைல், எலக்ட்ரிகல், பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு நிறையப் பேர் தேவைப்படுகின்றனர். இதற்குக் காரணம், ஜப்பான் மக்களுக்கு ஜப்பானிய மொழி ஒன்றுமட்டுமே தெரியும். ஆனால் ஜப்பான் நாட்டு தொழில்களும் நிறுவனங்களும் உலகம் முழுவதும் இருக்கின்றன. அவை சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரிந்தவர்கள் தேவை. இந்தியாவில் மாணவர்களுக்கு ஏற்கனவே ஆங்கிலம் தெரியும். எனவே அவர்களுக்கு ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால் ஜப்பானிய நிறுவனங்களில் எளிதில் வேலை கிடைத்துவிடும் சூழல் உள்ளது.

கம்ப்யூட்டர், பொறியியல் படிப்பு தவிர, பிற படிப்பு படித்த மாணவர்களுக்கும் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு உள்ளது. உதாரணமாக பிஏ ஆங்கிலம் படித்த ஒருவர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் ஃபிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட் பணிகளில் ஈடுபட முடியும். இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வம் காட்டிவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஜப்பானிய நிறுவனங்கள் 25 க்கும் மேல் உள்ளன. இன்னும் நிறையத் தொழிலகங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்திய மாணவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.

ஜப்பானிய மொழியை எந்த எந்த இடங்களில் கற்றுத் தருகிறீர்கள்?
நாங்கள் முதன் முதலில் 2005 - இல் மதுரையில் உள்ள டிவிஎஸ் பள்ளியில்தான் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் படிக்கும் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். அதன்பின் சென்னை ஆவடியிலுள்ள வேல்டெக் என்ஜினியரிங் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பொறியியல் மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். ஹெச்சிஎல் போன்ற நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் ஜப்பானிய மொழியைக் கற்றுத் தருகிறோம்.

தனிநபர்களுக்குக் கற்றுத் தருவதில்லையா?
கல்வி நிறுவனங்கள் மூலமாகவும், தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் கற்றுத் தருவதைப் போலவே, தனிநபர் ஒருவர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்தால் அவர்களுக்கும் கற்றுத் தருகிறோம். இதற்காக எங்களுடைய சென்னை அண்ணா நகர் மையத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

வாரக் கடைசி நாட்களான சனி, ஞாயிறுகளில் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கும் என்பதால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் இந்த வகுப்புகளை நடத்துகிறோம்.
ஜப்பானிய மொழிக்கான தேர்வுகளை நடத்துகிறீர்களா?
நாங்கள் நேரடியாகத் தேர்வு எதையும் நடத்துவதில்லை. ஜப்பானிய மொழியில் திறனறியும் தேர்வு ( JLPT) ஜப்பான் அரசால் நடத்தப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை நடத்துகிறது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் அவர்கள் ஒரு ஸர்டிபிகேட் தருவார்கள். அது இருந்தால்தான் ஜப்பானிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் தேர்வு நான்கு லெவல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நான்காவது லெவல் என்பது ஆரம்பநிலை. மூன்றாவது, இரண்டாவது, முதலாவது நிலைகள் படிப்படியாக ஆழமாக ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதைக் குறிக்கும். முதல் நிலை பயின்ற ஒருவர் ஜப்பானிய மொழியில் இருந்து பிறமொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து ஜப்பானிய மொழிக்கும் மொழிபெயர்க்கும் திறனைப் பெற்றுவிடுவார். மூன்றாவது நிலை வரை படித்தவரால் ஜப்பானிய மொழியில் பேசவும் எழுதவும் முடியும்.
பொதுவாக ஸôஃப்ட்வேர் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை செய்ய நான்காவது, மூன்றாவது நிலை வரை படித்தால் மட்டும் போதும்.
எந்த நிறுவனத்திற்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் போதும். எவ்வளவு நாளில் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள முடியும்?
நான்காவது நிலை, மூன்றாவது நிலை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் 150 மணி நேரங்கள் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இரண்டாவது மற்றும் முதலாவது நிலை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் 300 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
நேரடி வகுப்புகள் தவிர வேறு எந்த முறையில் கற்றுத் தருகிறீர்கள்?
ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள தொலைதூரக் கல்வி முறையையும் பயன்படுத்துகிறோம். இதற்கான தொடர்பு வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான்கு மணி நேரம் நடைபெறும். இணைய தளம் மூலமாகவும் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதற்கு புத்தகங்கள் தருகிறோம். கூடவே சிடியும் தருகிறோம். அந்த சிடியில் ஜப்பானிய எழுத்துகளை எழுதுவது எப்படி என்பதும், அவற்றை எப்படி உச்சரிப்பதும் என்பதும் கற்றுத் தரப்படும்.

எங்களுடைய ஆசிரியர்கள் ஜப்பானியர்கள். அவர்கள் ஜப்பானின் இயற்கைத்தன்மை மாறாமல் ஜப்பான் நாட்டுப் பாணியிலேயே பேசுவதற்குக் கற்றுத் தருகிறார்கள். இதனால் எங்களிடம் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டவர்கள் ஜப்பானிய நிறுவனங்களில் வேலை செய்வது மிக எளிதாகிவிடுகிறது.

எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள்?
நான்காவது நிலை, மூன்றாவது நிலை இரண்டும் பயில ரூ.17 ஆயிரம் ஆகிறது. அனைத்துநிலைகளையும் கற்றுக் கொள்ள ரூ.67 ஆயிரம் ஆகிறது.
ஜப்பானுக்குச் சென்று நேரடி பயிற்சி பெற முடியுமா?
ஜப்பானிய மொழியை எங்களின் மூலமாகக் கற்றுத் தரும் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் ஜப்பானில் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. வேலைவாய்ப்புக்கு அவை உதவுகின்றன.

ஜப்பானிய பல்கலைக் கழகங்களுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதனால் இங்குள்ள மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை அங்கு சென்று நேரடிப் பயிற்சி பெற முடியும்.

ஜப்பான் மொழியின் உச்சரிப்பு நமது தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சிரமம் அல்லவா?
ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்வது ஆங்கிலம் கற்றுக் கொள்வதைவிட மிக எளிது. காரணம் தமிழில் உள்ள வாக்கிய அமைப்புகளைப் போலவே ஜப்பானிய மொழியின் வாக்கிய அமைப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ளதைப் போலத் தலை கீழாக இல்லை.
நன்றி: தினமணிக்கதிர்
Reade more >>
Thursday, May 29, 2008 | 1 comments | Labels: ,