twitter


அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க, இந்தியாவில் சட்டம் கொண்டு வருவோம் என்று அந்த மாநாட்டில் அவர் பேசியதாக திடுக்கிடும் செய்தி வந்தது.

ஆணும் ஆணும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் சேர்ந்து கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்த வக்கிர உறவிற்குப் பெயர்தான் ஓரினச் சேர்க்கை என்பதாகும். இதற்கு ஒரு தமிழ் மகன் ஆதரவா? எண்ணிப் பார்க்கவே இதயம் நடுங்கியது.

ஆணும் ஆணும் குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் குடித்தனம் நடத்தலாம். இது என்ன கொடுமை? அப்படியானால் குடும்ப உறவுகள், மரபுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வேண்டுமா?

ஓரினச் சேர்க்கையை தமிழ்ச் சமுதாயம் அங்கீகரித்ததாகவோ ஆதரித்ததாகவோ எந்த இலக்கியத்திலும் எந்தத் தமிழ்க் கல்வெட்டிலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லி ஆங்கிலத் தொலைக்காட்சியைத் தற்செயலாகத் திருப்பினோம். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல் தந்தனர்.

ஓரினச் சேர்க்கை என்ற அநாகரிகத்திற்கு ஆட்பட்டு விட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்மீது மத்திய அரசின் கருத்தை உயர்நீதிமன்றம் கேட்டது.

`ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை, `ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

விரும்பிய ஓர் ஆணும் இன்னொரு ஆணும் குடும்ப வாழ்க்கை நடத்தினால் அவர்களுக்குத் தண்டனை தரக் கூடாது என்பதுதான் உயர்நீதி மன்றத்தை நாடிய ஓரினச் சேர்க்கையாளரின் கோரிக்கை. ஆஹா! அற்புதம்! அது வேதங்கள் கொள்கை கோட்பாடு என்று அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று உள்துறை தாக்கல் செய்த மனு கூறுகிறது. நல்லவேளை அந்தத் துறைக்கு சீழ்பிடித்த சிந்தனைகள் உதயமாகவில்லை.

`தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ரகசியமாக மறைமுகக் குடித்தனம் நடத்துகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் அளித்து விட்டால் பகிரங்கமாக வாழ்வார்கள். அப்படி வாழும் போது எய்ட்ஸ் நோய் வர வாய்ப்பில்லை. மறைமுக உறவுகள் அந்த நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்' என்பது மத்திய சுகாதாரத் துறையின் வாதம்.

ஓரினச் சேர்க்கை என்பது இந்திய கலாசாரச் சீரழிவின் உச்சகட்டம். அதனை அனுமதிப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டிற்கு விதிக்கப்படும் மரணதண்டனை.
முன்னர் ரஷ்யா சென்றிருந்தோம். மாஸ்கோ வானொலி தமிழ் ஒலிபரப்பில் சகோதரர் மணிவர்மா பணி செய்து கொண்டிருந்தார். அவர் கார்வண்ண கரியமேனியன். அவரை சோவியத் சகோதரி காதலித்து மணம் புரிந்து கொண்டார். அவர் ஆப்பிள் நிற அழகி.

அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது, `எப்படி அம்மா இவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?' என்று கேட்டோம். கலகலவெனச் சிரிப்பலைகள் எழுந்தன.

அந்தச் சகோதரி சொன்னார். `நான் தமிழ் கற்றவள். தமிழர் பண்பாடு தெரிந்தவள். அந்தப் பண்பாடு வேறு எங்கும் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் உயர்ந்த பண்பாடாகும். அந்தப் பண்பாட்டை மணந்திருக்கிறேன்!' என்றார் அந்தச் சுந்தரி.

நாம் எவ்வளவு பெரிய நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்பது அப்போதுதான் என் மூளையில் உறைத்தது. ஆனால் இங்கே அன்புமணிகள் அதிய ராகம் பாடுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புகைப்படத்தோடு ஒரு செய்தி வந்தது. வயது முதிர்ந்த ஜெர்மன் தம்பதியர் ராமேசுவரம் வந்தார்கள். ஆலயம் சென்றார்கள். தமிழர் பண்பாட்டின்படி இதுவரை வாழ்ந்திருக்கிறோம். மீண்டும் எங்களுக்குத் தமிழர் மண முறைப்படி திருமணம் நடத்துங்கள் என்று அவர்கள் கோரினர். மணவிழாவும் நடந்தது.

இந்தியாவில் எத்தனையோ தேசிய இனங்கள் இருக்கின்றன. அதில் தமிழ் மண்ணின் திருமண முறைதான் தலைசிறந்தது என்பது அந்த ஜெர்மன் தம்பதியர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

நமது குடும்ப உறவுகள் - மண முறைகள் இன்று நேற்று தோன்றியது அல்ல. சிந்துவெளி நாகரிகம் கண்ட எம் மூதாதையர் தந்த சீதனம்தான் உலகம் மெச்சும் நமது உறவுமுறைகள். அந்த உறவின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்தவை. இன்றுவரை அந்த நாகரிகத்தின் ஈரவரிகள் உலர்ந்து போகவில்லை.

அந்த மணமுறையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல் பெற்று பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது. பலதார மணம் கடந்து, `ஒருத்திக்கு ஒருவன்' என்ற கோட்பாட்டை எட்டினோம்.

காலவெள்ளத்தில் நமது குடும்ப உறவுகள் கரைந்து போனதில்லை.
ஆனால் இன்றைக்கு அந்தப் பண்பாட்டிற்கே கல்லறை எழுப்பத் துடிக்கிறார்கள். மேலைநாடுகளின் வக்கிர மனிதர்கள் வளர்க்கும் விபரீத உறவுகளுக்கு இங்கே அங்கீகாரம் தேடுகிறார்கள். வேரில் வெந்நீர் ஊற்றப் பார்க்கிறார்கள்.

லட்சம் பேருக்கு அதிகபட்சம் ஐம்பது பேர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். நாங்கள் இப்படித்தான் வாழ்வோம். எங்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தைத் திருத்துங்கள் என்று மேலைநாடுகளில் மைதானங்களிலும் பூங்காக்களிலும் அவர்கள் கட்டிப் புரள்கிறார்கள். அவர்களுக்காக வாதாட அடகுபோன சிலரும் இருக்கிறார்கள்.
மிருகங்களில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. பறவைகளில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. ஆனால் குப்பைமேட்டு மனிதர்கள் சிலர் அந்தக் கொடுமையான வாழ்க்கை நடத்துவோம் என்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கிருந்து எப்படிப் பணம் கொட்டுகிறது என்றே தெரியவில்லை. செல்வந்தர்களில் அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மேலைநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சிம்மாசனங்களையே வளைக்க முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள்.

ஆனால் இந்தப் பழம் பெரும் பூமி அத்தகைய அநாகரிகச் சட்டங்களை அண்ட விட்டதில்லை. நமது சட்டம் என்ன சொல்கிறது? ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 397வது சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று கூறுகிறது.

ஆனால் அந்தத் தண்டனையை ரத்து செய்து அந்த அநாகரிக உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். அண்மையில் சென்னை வந்த அவர், ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பிரதமரைச் சந்திப்பேன். கோரிக்கை மனுக் கொடுப்பேன் என்றார்.
ஓரினச் சேர்க்கையை அனுமதித்த பின்னரும் எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் பரவாது என்பதற்கு அவர் என்ன உத்தரவாதம் தருகிறார்?

பால்வினை நோய் பரவுவதற்கு ஓரினச் சேர்க்கை ஒரு காரணம் என்றால், அதனைத் தடுப்பதற்குத்தானே வழிவகை காண வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தக் கலாசாரச் சீரழிவை அங்கீகரித்தால் போதும் என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

ஒரு பக்கம் புகைபிடித்தால் 500 ரூபாய் வரை அபராதம் என்கிறார். இன்னொரு பக்கம் மானக்கேடான ஓரினச் சேர்க்கைக்கு விதிக்கும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இப்படி வேடிக்கை மனிதர்கள் விநோதத் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

சென்ற வாரம் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜை நிருபர்கள் சந்தித்தனர். `ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா' என்று கேட்டனர். `கர்மம் கர்மம்' என்றார் அவர். `பின்னர் ஏன் அதற்காக வாதாடுகிறார்கள்' என்று கேட்டனர்.

`எனக்கு வயதாகிப் போய் விட்டது. அவர்களையே கேளுங்கள்' என்றார் பரத்வாஜ்.

ஒரு பக்கம் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் என்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் தாங்கள்தான் இன்றைய காவலர்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக நியாயங்களையே சவக்குழிக்கு அனுப்பும் வாதங்களை முன் வைக்கிறார்கள். அதிசய ராகம் பாடுகிறார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
Reade more >>
Friday, November 21, 2008 | 1 comments | Labels:

சுழன்றடித்த சுனாமிக்குப் பிறகு தமிழக தட்பவெப்ப நிலையில் நிறைய மாற்றங்கள். கோடையில் அதீத அனல், குளிர்காலத்தில் மழையும் குளிரும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலை. இதன் தாக்கம் கடலிலும் எதிரொலிப்பதால் குமரி முதல் சென்னை வரை வரை பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்பி, ஆர்ப்பரிக்கின்றன. கடலை நம்பியே வாழும் மீனவர்கள், தமிழக மக்களின் மனதில் பயம்; பீதி. என்னவாயிற்று இயற்கைக்கு?``


காற்று மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதுதான் இதற்கு மூல காரணம். சுருக்கமாக `குளோபல் வார்மிங்'. இதனால் கடல் மட்டம் உயர்ந்து நீர் நிலத்திற்குள் வரும். குறிப்பா சென்னை நகரத்திற்கு இந்த ஆபத்து அதிகம்!'' என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல புவியியல் நிபுணரும், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான டாக்டர் ராமச்சந்திரன்.


``உலகின் தென்துருவமான அண்டார்ட்டிகா முழுவதும் பனிமலைகளின் ஆதிக்கம். மனிதர்கள் உயிர்வாழ முடியாத அளவு ரத்தத்தை உறைய வைக்கும் வெப்ப நிலை. ஆனால் கடந்த பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிற பனிக்கட்டிகள் மெல்லமெல்ல உருக ஆரம்பிச்சிருக்கு. இதற்குக் காரணம் அங்கே 0.5 முதல் 1% வரை வெப்பநிலை உயர்ந்திருப்பதுதான். இதனால் கடல் நீர்மட்டம் 28 செ.மீ. உயரம் என்கிற அசாதாரண நிலையைத் தொட்டிருக்கு.


1980-க்குப் பிறகு ஆராய்ச்சிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கு'' என்று சொல்லும் ராமச்சந்திரன், ``இப்போதிருக்கும் உலக வெப்ப நிலையில் 2% உயர்ந்தாலே போதும், ஆபத்து நிச்சயம்'' என்கிறார்.


ஏற்ற இறக்கமான தட்பவெப்ப நிலைக்கு மற்றொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது `எல் நினோ'. தென்அமெரிக்க நாடான `பெரு'வில் பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தில் உண்டாகும் மாற்றம்தான் `எல் நினோ'. உலகின் மேற்குப் பகுதியில் உயரமாக இருக்கும் இந்த நீரோட்டம், கிழக்குப் பக்கம் சற்று தாழ்வாக இருக்கும். அதன் காரணமாக கடல்நீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டத்தை உயர்த்துகிறது.சரி, பனிப்பாறைகள் உருகுவது இயல்புதானே. இயற்கை அதனை சமன் செய்து கொள்ளாதா?


``அப்படிச் சொல்ல முடியாது. உதாரணமா லார்சன் - ஏ. இவை அண்டார்ட்டிகாவில் இருக்கும் மிகப்பெரிய பனிப்பாறைகள். நான்காயிரம் ஆண்டுகள் பழமையானவை. பொதுவா மிக அதிக வெப்பம் தாக்கினாலன்றி பனிப்பாறைகள் எளிதில் உருகாது. ஆனால் தற்போது லார்சன்-ஏ பனிப்பாறைகள் உருகிக்கிட்டிருக்கு. இதனால் நீரின் அடர்த்தி, வெப்ப நிலை, காற்றின் வேகம்... உள்ளிட்டவற்றில் நிறைய மாற்றங்கள். இயற்கையின் போக்கையே இந்த மாற்றங்கள் புரட்டிப் போட்டுவிடும்'' என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார் ராமச்சந்திரன்.


`பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்தாலும், தமிழகத்திற்கு ஆபத்து உண்டா?' - என்ன சொல்கிறார் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராய்டு?


``இப்போ நாம மக்கிப் போன பொருட்களிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல், அனல் மின்சாரத்தைத்தான் எரிபொருட்களா பயன்படுத்துறோம். இதனால் காற்று மண்டலம் முழுவதும் கார்பன்_டை_ஆக்ஸைடின் அளவு எகிறுது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடல் பகுதியின் பரப்பளவு மிக நீ... ளம்.


குறிப்பா, கடலின் ஆழ்பகுதிக்கும் தரைப்பகுதிக்கும் இடையே உள்ள `மீன் ஸீ லெவல்' (எம்.எஸ்.எல்.) சென்னையில் மிகவும் குறைவு. உதாரணமா, ஊட்டியில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு மூவாயிரம் அடி. ஆனால் சென்னையில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு என்ன தெரியுமா? ஒரு அடிக்கும் குறைவு. சென்னையில் ராயபுரம் முதல் திருவான்மியூர் வரை இதுதான் நிலை. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டம் உயரும் போது சென்னைக்கு பாதிப்பு நிச்சயம்!' எனச் சொல்லும் ராய்டு, மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்துவதும், கடல்வாழ் தாவரங்களை வளர்ப்பதும் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று `பாசிட்டிவ்'வாகப் பதில் சொல்கிறார்..


``லேட்டஸ்ட்டாக இமய மலையை ஆய்வு செய்து வரும் டெல்லியைச் சேர்ந்த புவி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று `குளோபல் வார்மிங்' காரணமாக இமயமலையில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், இன்னும் 15 ஆண்டுகளில் பனிப்பாறைகள் முழுவதும் உருகி வெறும் கற்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர் மட்டம் உயர்ந்து சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடலில் மூழ்கும் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
Reade more >>
Sunday, November 9, 2008 | 3 comments | Labels: