twitter

தினமணிக் கதிரிலிருந்து தகவலுக்காக....
ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது ஒரு மனிதனுக்கு புதியதோர் உலகத்தைத் திறந்துவிடுவதைப் போன்றது. அதிலும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதினால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றால் புதிய வாழ்க்கைக்கான நுழைவாயிலாகவே அந்த மொழி மாறிவிடுகிறது. உலகமெங்கும் தனது நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது ஜப்பான். ஜப்பான் நிறுவனங்களில் வேலை செய்ய ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது அவசியம். ஜப்பானிய மொழியைக் கற்றுத் தரும் நிறுவனம் ஒன்று சென்னை அண்ணாநகரில் எஸ் அன்ட் என் ஹயகாவா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.ஹயகாவா. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

ஜெ.ஹயகாவா
ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது?
ஜப்பான் நாட்டின் ஸôஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். ஸôஃப்ட்வேர் மட்டுமில்லை, ஆட்டோமொபைல், எலக்ட்ரிகல், பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு நிறையப் பேர் தேவைப்படுகின்றனர். இதற்குக் காரணம், ஜப்பான் மக்களுக்கு ஜப்பானிய மொழி ஒன்றுமட்டுமே தெரியும். ஆனால் ஜப்பான் நாட்டு தொழில்களும் நிறுவனங்களும் உலகம் முழுவதும் இருக்கின்றன. அவை சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரிந்தவர்கள் தேவை. இந்தியாவில் மாணவர்களுக்கு ஏற்கனவே ஆங்கிலம் தெரியும். எனவே அவர்களுக்கு ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால் ஜப்பானிய நிறுவனங்களில் எளிதில் வேலை கிடைத்துவிடும் சூழல் உள்ளது.

கம்ப்யூட்டர், பொறியியல் படிப்பு தவிர, பிற படிப்பு படித்த மாணவர்களுக்கும் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு உள்ளது. உதாரணமாக பிஏ ஆங்கிலம் படித்த ஒருவர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் ஃபிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட் பணிகளில் ஈடுபட முடியும். இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வம் காட்டிவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஜப்பானிய நிறுவனங்கள் 25 க்கும் மேல் உள்ளன. இன்னும் நிறையத் தொழிலகங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்திய மாணவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.

ஜப்பானிய மொழியை எந்த எந்த இடங்களில் கற்றுத் தருகிறீர்கள்?
நாங்கள் முதன் முதலில் 2005 - இல் மதுரையில் உள்ள டிவிஎஸ் பள்ளியில்தான் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் படிக்கும் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். அதன்பின் சென்னை ஆவடியிலுள்ள வேல்டெக் என்ஜினியரிங் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பொறியியல் மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். ஹெச்சிஎல் போன்ற நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் ஜப்பானிய மொழியைக் கற்றுத் தருகிறோம்.

தனிநபர்களுக்குக் கற்றுத் தருவதில்லையா?
கல்வி நிறுவனங்கள் மூலமாகவும், தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் கற்றுத் தருவதைப் போலவே, தனிநபர் ஒருவர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்தால் அவர்களுக்கும் கற்றுத் தருகிறோம். இதற்காக எங்களுடைய சென்னை அண்ணா நகர் மையத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

வாரக் கடைசி நாட்களான சனி, ஞாயிறுகளில் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கும் என்பதால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் இந்த வகுப்புகளை நடத்துகிறோம்.
ஜப்பானிய மொழிக்கான தேர்வுகளை நடத்துகிறீர்களா?
நாங்கள் நேரடியாகத் தேர்வு எதையும் நடத்துவதில்லை. ஜப்பானிய மொழியில் திறனறியும் தேர்வு ( JLPT) ஜப்பான் அரசால் நடத்தப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை நடத்துகிறது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் அவர்கள் ஒரு ஸர்டிபிகேட் தருவார்கள். அது இருந்தால்தான் ஜப்பானிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் தேர்வு நான்கு லெவல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நான்காவது லெவல் என்பது ஆரம்பநிலை. மூன்றாவது, இரண்டாவது, முதலாவது நிலைகள் படிப்படியாக ஆழமாக ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதைக் குறிக்கும். முதல் நிலை பயின்ற ஒருவர் ஜப்பானிய மொழியில் இருந்து பிறமொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து ஜப்பானிய மொழிக்கும் மொழிபெயர்க்கும் திறனைப் பெற்றுவிடுவார். மூன்றாவது நிலை வரை படித்தவரால் ஜப்பானிய மொழியில் பேசவும் எழுதவும் முடியும்.
பொதுவாக ஸôஃப்ட்வேர் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை செய்ய நான்காவது, மூன்றாவது நிலை வரை படித்தால் மட்டும் போதும்.
எந்த நிறுவனத்திற்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் போதும். எவ்வளவு நாளில் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள முடியும்?
நான்காவது நிலை, மூன்றாவது நிலை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் 150 மணி நேரங்கள் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இரண்டாவது மற்றும் முதலாவது நிலை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் 300 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
நேரடி வகுப்புகள் தவிர வேறு எந்த முறையில் கற்றுத் தருகிறீர்கள்?
ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள தொலைதூரக் கல்வி முறையையும் பயன்படுத்துகிறோம். இதற்கான தொடர்பு வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான்கு மணி நேரம் நடைபெறும். இணைய தளம் மூலமாகவும் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதற்கு புத்தகங்கள் தருகிறோம். கூடவே சிடியும் தருகிறோம். அந்த சிடியில் ஜப்பானிய எழுத்துகளை எழுதுவது எப்படி என்பதும், அவற்றை எப்படி உச்சரிப்பதும் என்பதும் கற்றுத் தரப்படும்.

எங்களுடைய ஆசிரியர்கள் ஜப்பானியர்கள். அவர்கள் ஜப்பானின் இயற்கைத்தன்மை மாறாமல் ஜப்பான் நாட்டுப் பாணியிலேயே பேசுவதற்குக் கற்றுத் தருகிறார்கள். இதனால் எங்களிடம் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டவர்கள் ஜப்பானிய நிறுவனங்களில் வேலை செய்வது மிக எளிதாகிவிடுகிறது.

எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள்?
நான்காவது நிலை, மூன்றாவது நிலை இரண்டும் பயில ரூ.17 ஆயிரம் ஆகிறது. அனைத்துநிலைகளையும் கற்றுக் கொள்ள ரூ.67 ஆயிரம் ஆகிறது.
ஜப்பானுக்குச் சென்று நேரடி பயிற்சி பெற முடியுமா?
ஜப்பானிய மொழியை எங்களின் மூலமாகக் கற்றுத் தரும் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் ஜப்பானில் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. வேலைவாய்ப்புக்கு அவை உதவுகின்றன.

ஜப்பானிய பல்கலைக் கழகங்களுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதனால் இங்குள்ள மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை அங்கு சென்று நேரடிப் பயிற்சி பெற முடியும்.

ஜப்பான் மொழியின் உச்சரிப்பு நமது தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சிரமம் அல்லவா?
ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்வது ஆங்கிலம் கற்றுக் கொள்வதைவிட மிக எளிது. காரணம் தமிழில் உள்ள வாக்கிய அமைப்புகளைப் போலவே ஜப்பானிய மொழியின் வாக்கிய அமைப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ளதைப் போலத் தலை கீழாக இல்லை.
நன்றி: தினமணிக்கதிர்
Reade more >>
Thursday, May 29, 2008 | 1 comments | Labels: ,
பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூவிலிருந்து.... தகவலுக்காக சுட்டது.

குறிப்பிட்ட சில பண முதலைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சிப்காட்தான் நம்மை போன்ற சமான்ய மக்களுக்கு சாபக்கேடாக வந்து வாய்த்துள்ளது. சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஒரு இத்தகவலை வெளியிட்டிருக்கிறது நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு. இது குறித்து MYPNO வலைப்பூவில் ஏற்னகவே 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன? தகவல் வெளியிட்டுள்ளோம்.

ஒரு சராசரி மனிதனைவிட 2000 மடங்கு கேன்சர் ரிஸ்க் இருக்கிறதாம் இந்த பகுதி மக்களுக்கு. அது மட்டுமின்றி, சிப்காட் கழிவுகள் கடலுக்கு செல்வதால் இப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உண்ணுபவருக்கும் இந்த ரிஸ்க் இருக்கிறதாம், அவர் எந்த நாட்டிலிருந்தாலும் சரி, இங்கிருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில்.....!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எத்தனை ஆய்வறிக்கைகள், புகார்கள் என்று குவிந்தவண்ணமிருந்தும் அவற்றையெல்லாம் பெயரளவிற்கு பரிசீலிக்கிறோம் என்று சொல்கிறதேயொழிய இதுவரை எந்த நடவடிக்கையும் முறைப்படி எடுக்கவில்லை.

தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இதர சுற்றுப்புறசூழல்/மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் என்று அடிக்கடி இந்த ஏரியாவில் உள்ள காற்று, மண், நீர் போன்றவற்றை ஆரயாச்சி செய்து கேன்சர் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் (Toxic Chemicals) மிகுதியாக உள்ளது என்று ஆய்வறிக்கைகளை சமர்பித்தாலும்... இதுவரை நோ ஆக்ஷ்ன்தான்.

இதற்கிடையில் பொதுமக்களை ஏமாற்றுவதற்கும், வாக்குகளை பெறுவதற்கும் அரசியல் கட்சிகள் அடிக்கடி போராட்டங்கள் என்று பெயரளவிற்கு அறிவித்து பிறகு பேரங்களின் ஆதாயங்களைக் பெற்றவுடன் அட்ரஸே தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள். போரட்டங்களை அறிவிப்பதே இது போன்ற பேரங்களுக்கத்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?பொதுமக்கள் நேரிடியாக களத்தில் இறங்கி போராடினால், நாங்கள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறோம் என்று மக்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்களே தவிர முறையான நடவடிக்கைகள் எதுவும் இருக்காது. சிப்காட் தொழிற்பேட்டையால் அரசியல் கட்சிகள் ஆதாயமடைந்து வரும் நிலையில் மக்களின் பிரச்சினைக்கு அவர்கள் எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பார்கள்?

ஆறுதலுக்காக ஒரு லிங்க் தருகிறேன். இதை க்ளிக் செய்து தமிழக முதல்வருக்கு நீங்கள் பெட்டிஷன் அனுப்பலாம். இது தமிழ்நாடு அரசின் செயலகத்தில் உள்ள சி.எம். செல்லிற்கு ஃபாக்ஸ் செய்தியாகப் (Online Fax Message) போய் சேரும்.

SEND AN ONLINE FAX URGING TAMIL NADU GOVERNMENT TO STOP POLLUTING CUDDALORE
http://petitions.aidindia.org/cuddalore/

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் வேண்டுகோளை ஏற்று கடந்த மாதம் கூட கனிமொழி கடலூரில் உள்ள சர்ச்சைக்குள்ளான அந்த தொழிற்சாலைகளை(Shasun Chemicals and Tagros Chemical Ltd) பார்வையிட்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பார்வையில் விதிகளுக்கு புறம்பான இவ்விரு தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியரை இப்பகுதி மக்களிடம் ஒரு மருத்துவ பரிசோதனை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனும் கலந்துகொண்டனர். தி.மு.க மகளிர் மாநாட்டுக்கு ஏற்பாடுகளை கவனிக்க கடலூர் வந்தபோது இப்படி ஒரு சோதனையை நடத்திச்சென்றுள்ளார் கனிமொழி. ஆனாலும் என்ன நடவடிக்கைகள், எப்போது எடுக்கப்படும் என்று வியலுக்காக காத்திருப்புகள் தொடரத்தானே செய்கிறது.

தேசிய அளவில் எத்தனையோ கட்சிகளும், அமைப்புகளும் பெப்ஸி-கோக் நச்சுப் பொருளுக்காக போரடியதை அவர்கள் உட்பட நாமும் வசதியாக மறந்து நிற்கிறோமே!

இவ்வளவு தெரிந்தும் கூட இன்னமும் பரங்கிப்பேட்டை மக்கள் தன்னுடைய வாரிசுகளுக்கு சிறந்த கல்வி(?) புகட்டச் செல்கிறோம் என்கிற பெயரில் கடலூருக்கு தனிக்குடித்தனம் புகுவிழாக்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். கேன்சர் ஏரியா... உள்ள வராதே! என்று ஒரு போர்டு வைக்கனும் என்று தோனுகிறது எனக்கு... கடலூர் எல்லையில்.

வேறு ஏதாவது மாற்று வழி தேவை இவற்றை தடுப்பதற்கு. அறிவுப்பூர்வமாக யோசித்து உங்களின் கருத்துகளை இங்கு பதிவுடுங்கள். அலசுவோம்.... ஆலோசனை செய்வோம்!..... தொடரும்....

குறிப்பு: இந்த தகவல்கள் எல்லாம் எனது கற்பனையல்ல. இது குறித்து முழு விபரம் அறிய கீழ்கண்ட லிங்கினை க்ளிக்கவும்.

http://mypno.blogspot.com/2008/04/25.html
http://www.alternet.org/healthwellness/85630/?page=entire
http://cuddaloreonline.blogspot.com/2008/05/toxic-chemicals-in-sipcot-cuddalore-and.html
http://www.sipcotcuddalore.com/pr_220308.html
http://www.sipcotcuddalore.com/News_Thaindian_230308.html
Reade more >>
Tuesday, May 27, 2008 | 1 comments | Labels:

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எதிரான விளையாட்டு பொருட்களின் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு அமெரிக்கன் கம்பெனி விளையாட்டு பொருட்களை விற்பனை செய்வதிலிருந்து பின்வாங்கியது. விற்பனை செய்யும் கடைகளிலும் பரிசோதனை செய்யப்பட்டது.


இதற்கிடையில் நோக்கியா கம்பெனியின் பாட்டரியான BL^5c வரிசை எண்ணுள்ள சில பாட்டரிகள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டதால் அதை பின்வாங்குவதாக நோக்கியா கம்பெனியின் அதிகாரிகள் அறிவித்தனர். இந்த வகை பாட்டரிகளை செல்போணில் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது அவை அதிகமாக சூடாகி ஆபத்தை உண்டாக்கும் என கண்டறியப்பட்டதாலேயே இது நிறுத்தப்படுகிறது.


தாம் உபயோகிக்கும் பேட்டரிகள் இந்த வகையில் உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய www.nokia.com/batteryreplacement/ent என்ற வெப்ஸைட்டுக்கு சென்று பாட்டரியின் வரிசை எண்ணை டைப் செய்து பரிசோதிக்கலாம். இந்த வகை பாட்டரிதான் என்பது ஊர்ஜிதமானால் பயன்படுத்துபவரின் பெயரையும் விலாசத்தையும் பதிவு செய்தால் கம்பெனிமூலம் இலவசமாக புதிய பாட்டரி அனுப்பிதரப்படுமென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Reade more >>
Saturday, May 24, 2008 | 1 comments | Labels:
முப்பது வயச தாண்ட முடியல! உடனே... கொலஸ்ட்ரால் இருக்கா? B.P. இருக்கா? சுகர் எவ்வளவு இருக்கு? என்று நம்மள கேள்விகளால் கொத்தி எடுத்துடுறாங்க நம்மை சுற்றியிருக்கும் Wellwishers! 30 வது பிறந்த நாள் என்றால் "லப்டப்... லப்டப்..." என்று துடித்துக் கொண்டிருந்த நம் இதயம் "பக்பக்... பக்பக்..." என்று பதற ஆரம்பித்துவிடுகிறது இவர்களின் பயமுறுத்தலினால். கேட்டா என்னென்னமோ காரணத்த சொல்றாங்க!

முன்னெல்லாம் 50 வயசுக்கு பிறகுதான் இதுமாதிரியெல்லாம் கணக்கு போட்டு ஹார்ட் பிராப்ளம் வரும் பார்த்து சாப்புடுங்க.... அத்த குறைங்க! இத்த குறைங்க!! என்று குரைப்புகள் அதிகமாகியிருக்கும். ஆனால் ஐம்பது என்பது நாற்பதாக குறைந்து இப்ப முப்பாதாக இன்னும் ஸ்மார்ட்டாகியுள்ளது. இப்படியே போனால்.... பிறக்கும் போதே ஒரு லிஸ்ட்ட கொடுத்து "நீ ஒழுங்கா இந்த உலகத்துல நடமாடனுமென்றால்.... இதத்தான் சாப்பிடனும்" என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கு.

அதுகூட இவர்கள் விமர்சிக்கும் கெமிக்கல் வகையாறாக்களை சார்ந்தே இருக்கும். இதற்கு நாம் பேசாமல் கற்காலத்துக்கே போய்விடலாம். அட விளயாட்டுக்கு சொல்லலீங்க! நிஜம்தான்!!

நம்முடைய முன்னோர்களான கற்கால மனிதர்களின் உணவான இலந்தை, உலர்ந்த பழங்கள், கொழுப்பற்ற இறைச்சி, மீன் ஆகியவற்றை சாப்பிட்டால் இதயம் தொடர்பான நோய்கள் குறையும். அட! நான் சொல்லலீங்க!! சுவீடனில் உள்ள கைரோலிம்ஸ்கா என்கிற அமைப்பு அன்மையில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, 20 பேருக்கு கற்கால மனிதர்களின் உணவை 3 வாரம் வழங்கப்பட்டது. பழங்கள், காய்கறிகள், உப்பில்லாத மீன், எலுமிச்சை சாறு, சர்க்கரையில்லாத காபி-டீ போன்றவை 3 வாரங்களக்கு கொடுக்கப்பட்டது. இத்துடன் தினமும் உருளை கிழங்கு 2 (மடடும்) அனுமதிக்கப்பட்டு, பால் பொருட்கள், உப்பு, வேர்கடலை, ஆல்கஹால், சர்க்கரை, பழரசங்கள் போன்றவற்றை உண்ண தடை செய்து ஆய்வு செய்தது. அதன்படி இவர்களின் எடை 25 கிலோ குறைந்திருந்தது. மேலும் உயர் ரத்த அழுத்தம் சராசரியாக 5 சதவீதம் குறைந்தும், ரத்தத்தில் சோர்வை உண்டாக்கும் ரசாயணங்கள் 72 சதவீதம் குறைந்தும் காணப்பட்டது.

ஹலோ! எங்க கௌம்புறீங்க? எலந்த பழம் வாங்கவா?
Reade more >>
Monday, May 19, 2008 | 0 comments | Labels:

நம் இந்தியத் திருநாட்டில்தான் பில்கேட்ஸிடம் போட்டி போடும் உலகப் பணக்காரர்களும் வயிற்றுப்பசிக்காக பிச்சை கேட்கும் இந்திய குடிமகன்களும். வேற்றுமையில் ஒற்றுமை இருக்கவேண்டியதுதான். அதற்காக இப்படியா வேற்றுமை மட்டுமே தலைநிமிர்க்க வேண்டும்?

இந்தியாவில் மலிந்து கிடக்கும் ஊழல்களால் 80 சதவீத்தினருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என்று, ஐ.நா.வின் பொருளாதார, சமூக கலாச்சார உரிமை கமிட்டியிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையை பொருளாதார, சமூக, கலாச்சார உரிமை தொடர்பான மக்கள் கருத்துக் குழு தாக்கல் செய்துள்ளது (நன்றி: தினமலர்).

என்னய்யா இப்படி ஒரு குண்ட போடுறாங்க? என்று மல்லாக்கப் படுத்தும் குப்புறப்படுத்தும் யோசித்துப் பார்த்தால் என் தலைதான் சுத்துததே தவிர ஒரு மண்ணும் பிடிபடமாட்டேங்குது. வலைப்பூவில் ஏதாவது சொல்லனுமே என்று கொஞ்சம் சுதாகரித்து எழுந்து இதுபற்றி வலைவிரித்தால்... அடேங்கப்பாதான்!
இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350 - 400 மில்லியன் மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35சதவீதம் இந்தியர்கள் 1 அமெரிக்க டாலர் வருமானத்திலேயே வாழ்கின்றார்கள். இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40 சதவீத மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரிது - என்கிறது ஒரு ஆய்வு (நன்றி: விக்கிப்பீடியா).

நம் நாட்டில் ஊழல் பெருகி வருவதால் ஐந்தில் நான்கு பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லையாம். சரியான நேரத்தில் பொருட்கள் பட்டுவடா செய்யப்படாமல் இருப்பது, பொருட்களை திருடுவது, பெரும் ஊழல்கள் போன்றவற்றால் பொது வினியோக முறை அலங்கோல நிலையில் உள்ளது என்றும் மேற்கண்ட இந்த குழு கூறுகிறது.

பாருங்கய்யா! இந்த அவல நிலையில் தான் நகரமெங்கும் ஐ.டி. நிறுவனங்கள் பெருகி வருகிறது. ஆனால் என்னத்த சொல்ல? ஐ.டி. நிறுவனங்கள் பெருகிவிட்டாலும் அய்யா! அம்மா! பிச்ச போடுங்கய்யா என்கிற கூப்பாடுகள் தொலையவில்லையே?
இந்த லட்சணத்தில் நம்நாட்டின் பொருளாதாரக் கொள்கையெல்லாம் எடுத்து பார்த்தோம் என்றால் ஒண்ணுமே விளங்கமாட்டேங்குது. அந்த லெவலுக்கு குழப்பி வைத்திருக்கிறார் நம்முடைய நிதிஅமைச்சர். விலைவாசி ஏற்றத்துக்கு எந்த சரியான தீர்வை பெறாமல் திணருகிறது மைய்ய அரசு. யாருக்குத் திண்டாட்டம்? வயிற்றுப் பசிக்கு கையேந்தும் சகோதர குடிமகன்களுக்கும் அடுத்த வேளை உணவிற்காக உழைக்கும் அன்றாடகாட்சிகளுக்கும் முக்கியமாக எந்த பிரச்சினைகளுக்கும் பங்கு எடுக்கவேண்டிய நடுத்தரக் குடும்பங்களுக்கும்தான் (அட! ஒட்டுமொத்த இந்தியாவும் அடங்கிவிடும் போல..)

ஆனால் கொஞ்ம் உற்று கவனித்தால் உலகப் பணக்காரர்களாக துடிக்கும் அம்பானிக்களும் டாட்டாக்களும் ஒருபுறமிருக்க, நம்ம மதிப்புற்குரிய சினிமா ஹீரோக்களும், கிரிக்கெட் வீரர்(?)களும் இவ்வளவு கோடிக்களை வைத்து அப்படி என்னதான் செய்றாங்க என்று தெரியவில்லை. (ஹலோ... ஹலோ... அரசியல்வாதிகளையெல்லாம் விட்டுட்டீயமா? என்று நீங்க புலம்புவது என் காதில் கேட்கிறது. இருந்தாலும் என்னத்த சொல்ல அவர்களைப் பத்தி? அப்புறம் பத்தி? வேணாமுங்க இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ் தான்).
என்னங்க நான்பாட்டுக்கு சொல்லிக்கிட்டு போனால்...... அப்புறம் உங்க கருத்தெல்லாம்? அதுதானே முக்கியம்! வாங்க வாங்க உங்க கருத்த பதிவிடுங்க முதலில்... அதுக்கப்புறம் விவாதிப்போம். சரியா?
Reade more >>
Saturday, May 17, 2008 | 2 comments | Labels:
"நமது முக்கியமான பிரச்சனை நமது அடையாளத்தை நாம் உணராததில் துவங்குகிறது. இத்தனை ஆண்டு கால இருப்பில் பரங்கிப்பேட்டைக்கு என்று கூட தனி வரலாறு தொகுக்கப்படவில்லை. 1000 ஆண்டு ஆண்ட பரம்பரையான நமது அடையாளத்தை நம்மை வென்று ஆளவந்த வெள்ளயன் தொகுத்தான். அந்த திரிபுகளத்தான் இன்றும் அனைவரும் படிக்கிறோம். இந்த அடையாள தொலைத்தலின் காரணம்கூட கல்வியின்மைதான்...." இப்படியான போக்குடன் துவங்கி, மிக ஆழமான சிந்தனைகள தூண்டி வந்திருந்த மாணவமணிகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு தனி சிந்தனை பரிமாணத்தை பரிசளித்தது சி.எம்.என். சலீம் அவர்களின் உரை.

நிச்சயமாக இந்த கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் பரங்கிப்பேட்டைக்கு புதிது.பிற சமுதாயங்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தினால் அந்த சமுதாயம் கண்ட பலன்கள சி.எம்.என். சலீம் அவர்கள் விரிவாக அலசினார். சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்த ராஜேந்திர சச்சாரின் கமிட்டியின் அறிக்கையில் படம்பிடித்துக்காட்டப் பட்ட முஸ்லிம்களின் அவல வாழ்நிலையை பிற சமுதாய முன்னேற்றத்துடன் ஒப்பு நோக்கி பேசினார்.


கல்வியின் முக்கியத்துவம் பற்றி மிகவும் அழுத்தமான பதிவுகள வைத்த அவர், தொடர்ந்து கல்வி வழிகாட்டுதல் தொடர்பான விஷயங்கள கோர்வையாக விளக்கினார்.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. போன்ற சாமானியர்கள் நெருங்க தயங்கும் கல்வியில் நுழைவது எப்படி என்றும்,மருத்துவம், பொறியியல், மேலாண்மை மற்றும் பல்வேறு தரப்பட்ட கல்விப்பிரிவுகளயும் அதற்கான தயார்படுத்தல்கள் பற்றியும்,இந்திய ஆட்சிப்பணி, (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) போன்றவைகள படித்து சாதிப்பதில் எத்தனை எளிதான முறைகள் உள்ளன என்றும், டி.என்.பி.சி., யூ.பி.எஸ்.சி போன்ற போட்டித்தேர்வுகள எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், சட்டம் படித்தவர்கள் வழக்குரைஞர்களாகப்போய்தான் சம்பாதிக்க வேண்டியதில்லை, சட்ட கண்ஸல்டண்டகளாக மிக அதிகளவில் பொருளீட்ட முடியும் நிலையைபற்றியும், அதுவும் உள்நாட்டு சட்டம் பற்றியல்லாமல் சர்வதேச மற்றும் மிடில் ஈஸ்ட் சட்டம் பயிலலாம் என்பது பற்றியும், பயன்தரத்தக்க கருத்துக்கள மிகவும் எளிமையான முறையில் பகிர்ந்து கொண்டார்.

தேநீர் இடைவேளக்கு பின்னர் தொடர்ந்த உரையில், பரங்கிப்பேட்டை மட்டுமல்ல சுற்றுவட்டார 3 மாவட்டங்களுக்கு ஒரே ஒரு பெண்கள் கல்லூரிகூட இல்லை என்ற ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். பெண் கல்விக்கு பாதுகாப்பான சூழல்கள நாம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் உணர்த்தினார். (பிற்பாடு கல்விக்குழு தலைவர் பேசுகையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் அவர்கள் பேரூராட்சி மன்றத்தின் தலைவராகவும் இருப்பதால், நமதூரில் பெண்கள் கல்லூரி ஒன்றினை துவங்குமாறு கோரிக்கை வைத்தார்.)

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனூஸ் அவர்கள் தனது தலைமை உரையில் பரங்கிப்பேட்டை கல்வி வளர்ச்சிக்கு ஜமாஅத் பாடுபட்டு வரும் முறைமைகள விவரித்தார். கடந்த காலங்களில் பள்ளி முதல் நிலை பெற்ற மாணவர்களான நூர் முஹம்மது நைனா, ஹபீபா ஜுலைகா போன்றோர் தங்களது கருத்துக்கள மேடையில் பகிர்ந்து கொண்டது இனிமை. இந்த கல்வி மாநாட்டிற்கு நிறைவாக வந்திருந்த கூட்டம், இது பரங்கிப்பேட்டைதானா என்ற மெல்லிய வியப்பை ஏற்படுத்தியது. மண்டபத்தின் பக்கவாட்டுச்சுவர்களில் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் கொண்ட டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. மிகவும் எளிமையான முறையில் துவங்கி அழகிய முறையில் ஆர்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அறிவார்ந்த அடையாளங்களாடு கல்விக்குழு தலைவரின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.

Reade more >>
Wednesday, May 14, 2008 | 0 comments | Labels: