twitter

முப்பது வயச தாண்ட முடியல! உடனே... கொலஸ்ட்ரால் இருக்கா? B.P. இருக்கா? சுகர் எவ்வளவு இருக்கு? என்று நம்மள கேள்விகளால் கொத்தி எடுத்துடுறாங்க நம்மை சுற்றியிருக்கும் Wellwishers! 30 வது பிறந்த நாள் என்றால் "லப்டப்... லப்டப்..." என்று துடித்துக் கொண்டிருந்த நம் இதயம் "பக்பக்... பக்பக்..." என்று பதற ஆரம்பித்துவிடுகிறது இவர்களின் பயமுறுத்தலினால். கேட்டா என்னென்னமோ காரணத்த சொல்றாங்க!

முன்னெல்லாம் 50 வயசுக்கு பிறகுதான் இதுமாதிரியெல்லாம் கணக்கு போட்டு ஹார்ட் பிராப்ளம் வரும் பார்த்து சாப்புடுங்க.... அத்த குறைங்க! இத்த குறைங்க!! என்று குரைப்புகள் அதிகமாகியிருக்கும். ஆனால் ஐம்பது என்பது நாற்பதாக குறைந்து இப்ப முப்பாதாக இன்னும் ஸ்மார்ட்டாகியுள்ளது. இப்படியே போனால்.... பிறக்கும் போதே ஒரு லிஸ்ட்ட கொடுத்து "நீ ஒழுங்கா இந்த உலகத்துல நடமாடனுமென்றால்.... இதத்தான் சாப்பிடனும்" என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கு.

அதுகூட இவர்கள் விமர்சிக்கும் கெமிக்கல் வகையாறாக்களை சார்ந்தே இருக்கும். இதற்கு நாம் பேசாமல் கற்காலத்துக்கே போய்விடலாம். அட விளயாட்டுக்கு சொல்லலீங்க! நிஜம்தான்!!

நம்முடைய முன்னோர்களான கற்கால மனிதர்களின் உணவான இலந்தை, உலர்ந்த பழங்கள், கொழுப்பற்ற இறைச்சி, மீன் ஆகியவற்றை சாப்பிட்டால் இதயம் தொடர்பான நோய்கள் குறையும். அட! நான் சொல்லலீங்க!! சுவீடனில் உள்ள கைரோலிம்ஸ்கா என்கிற அமைப்பு அன்மையில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, 20 பேருக்கு கற்கால மனிதர்களின் உணவை 3 வாரம் வழங்கப்பட்டது. பழங்கள், காய்கறிகள், உப்பில்லாத மீன், எலுமிச்சை சாறு, சர்க்கரையில்லாத காபி-டீ போன்றவை 3 வாரங்களக்கு கொடுக்கப்பட்டது. இத்துடன் தினமும் உருளை கிழங்கு 2 (மடடும்) அனுமதிக்கப்பட்டு, பால் பொருட்கள், உப்பு, வேர்கடலை, ஆல்கஹால், சர்க்கரை, பழரசங்கள் போன்றவற்றை உண்ண தடை செய்து ஆய்வு செய்தது. அதன்படி இவர்களின் எடை 25 கிலோ குறைந்திருந்தது. மேலும் உயர் ரத்த அழுத்தம் சராசரியாக 5 சதவீதம் குறைந்தும், ரத்தத்தில் சோர்வை உண்டாக்கும் ரசாயணங்கள் 72 சதவீதம் குறைந்தும் காணப்பட்டது.

ஹலோ! எங்க கௌம்புறீங்க? எலந்த பழம் வாங்கவா?
Monday, May 19, 2008 | 0 comments | Labels:

0 comments: