twitter

காங்கிரஸ், பா.ஜ., மற்றும் சமாஜ்வாடி வெளியிட்ட முதல் பட்டியலில், 18 வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள்; சிலர் தண்டனை பெற்றிருப்பவர்கள். கிரிமினல்களை அரசியலில் சேர்க்கக்கூடாது என்று என்னதான் முழங்கினாலும், பல கட்சிகளிலும் இவர்களின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. போதாக்குறைக்கு, பணபலமும், செல்வாக்கும் உள்ளதால் தேர்தலில் நிறுத்த வேண்டிய கட்டாயம் கட்சிகளுக்கு ஏற்படுகிறது.

"நேஷனல் எலக்ஷன் வாட்ச்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இது தொடர்பாக தகவல் களை திரட்டியுள்ளது. கடந்த தேர்தல்களிலும் இந்த அமைப்பு, அரசியலில் கிரிமினல்கள் ஆதிக் கம் பற்றி தகவல்களை ஆராய்ந்து சர்வே அறிக்கையை வெளியிட்டது.லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சிகள் வெளியிட்டதில், 18 பேர் கிரிமினல் நடவடிக்கைக்கு ஆட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில், காங்கிரசை சேர்ந்தவர்களில் நான்கு பேர், பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் எட்டு பேர், சமாஜ் வாடியில் ஆறு பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

முலாயம் சிங்கின் சமாஜ்வாடியில் இருந்த நடிகர் ராஜ் பப்பர், இப்போது காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். அதுபோல, பா.ஜ.,வின் ஆனந்த் குமார், ராம்காந்த் யாதவ் மற்றும் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. சித்து மீதான கொலை வழக்கில் அவருக்கு தண்டனை தரப்பட்டு, அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள லோக்சபாவை சேர்ந்த இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த 169 எம்.பி.,க்கள் வெளியிட்ட வாக்குமூலத்தில், தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். உ.பி.,யில் மெய்ன்பூரி தொகுதியில் போட்டியிட உள்ள சமாஜ் வாடி தலைவர் முலாயம் சிங் மீது அளவுக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு உட்பட சில வழக்குகள் விசாரணையில் உள்ளன.

மற்ற மாநிலங்களை விட, உ.பி.,யில் தான் அதிகமாக கிரிமினல் வேட்பாளர்கள் நிற்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

நாளேட்டுச்செய்தி (12-03-09)
Thursday, March 12, 2009 | 3 comments | Labels:

3 comments:

  1. Anonymous
    March 12, 2009 at 2:31 AM

    தலைப்பு தப்புண்ணே,

    "கட்சிகளின் முதல் பட்டியலில் 18 பேர் (அங்கிகரிக்கப்பட்ட)கிரிமினல்கள் "
    அப்படி வெச்சாதான் சரி.

  1. ரங்குடு
    April 16, 2009 at 9:23 AM

    அந்த மாதிரி வழக்கு இருந்தால் தானேங்க அரசியலுக்கே வரத் தகுதியானவர் என்று சொல்ல முடியும்.

    அது சரி, மத்த வேட்பாளர்கள் எல்லாரையும் வழக்கு இல்லாத கிரிமினல்கள் என்று சொல்ல முடியுமா?

    மாட்டினாதானே திருடன்?

  1. www.bogy.in
    April 14, 2010 at 11:28 AM

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in